த. கோவேந்தன்
91
மகிழ்கிறார்கள்" என்றார். தாயாகிய நான் மட்டும் என்ன? பிள்ளைகளின் இன்பச் சூழலை உணர்ந்து மகிழ்கிறேன்; ஏன் அந்தக் குழந்தைகளைப் போலவே அவர்களுடைய தந்தையும் அல்லவா அன்பில் புதிய இன்பச் சூழலில் மகிழ்ந்து திளைக்கிறார் என்று சொன்னார் அந்தப் பெண்மணி.
அந்த வீட்டில் உள்ள சிறுபிள்ளை ஒருவன் அவன் தந்தையைப் பார்த்து, அப்பா இன்று வானொலியில் திரு. தங்கப்பா நமக்குச் சொன்னதைக் கேட்ட படியினால், அம்மாவும் நானும் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறோம் தெரியுங்களா? என்று சொன்னானாம்!
இப்படிப்பட்ட பண்பாளரின் அன்பின் மறுபதிப்பான அன்பு ஒன்றுதான்!
குழந்தையின் அழும் நெஞ்ச ஒலியினாலும், இளைஞரின் நெஞ்சக் குமுறலானாலும், ஆடவர் மகளிர் மற்றும் முதியவர் அனைவருடைய மனக் குமுறலுக்கும் தக்க மருந்தாக விடையாக அமைவது அன்புதான்.
நம் மனத்தில் குடி கொண்டுள்ள வெறுப்பினை - வன்மத்தை அகற்றுவது அன்பு! அகத்தில் உள்ள வெறுப்புணர்ச்சியினைக் காட்டும் கண்ணாடியாம் முகத்தில் தோன்றும் கடுகடுப்பான உணர்ச்சி வரிகளைத் துடைத்து, அழகின் ஒளிக்கீற்றுப் பதிப்பதும் இந்தப் புதிய அன்புதான்! அதே புதிய அன்புதான் ஒரு கணவன் மனைவி இருவரிடையே ஒர் ஒற்றுமை உணர்வை, இல்லாதனவற்றை விடுத்து இருப்பதைக் கொண்டு "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற மொழிக்கேற்ப மனநிறை வினையும் தருவது.
அன்புதான் இல்லறம் தழைக்கச் செய்யும் இன்ப மழை! அதே அன்புதான் நல்லறப் பயிரைப் பேணிக்காக்கும் அறமழை!
சுருங்கச் சொன்னால், நல்லறம் ஒங்கும் இல்லறம் வாழும் இல்லத்தைக் குடும்ப மாளிகையைக் கட்டி முடிப்பதும் அன்பு! கட்டி முடித்த குடும்ப மாளிகையை நிலைக்க வைப்பதும் பேணிக் காப்பதும் அன்புதான்!
திருமணத்தைச் செய்துவைப்பதற்கும் திருமணமான பிறகு பிறக்கும் குழந்தைகளையும் குழந்தைகளைப் பெற்ற தாயினைத் -