பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை, குறிஞ்சி 2.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொகை - வகை - உரை த. கோவேந்தன்

167



பெண் அன்று, புனையிழாய் எனக் கூறி - தொழுஉம்,
தாழுதே
கண்ணும் நீராக நடுங்கினன், இன் நகாய்!
என் செய்தான்கொல்லோ - இஃது ஒத்தன் தன்கண்
பொருகளிறு அன்ன தகை சாம்பி, உள்உள்
உருகுவான் போலும், உடைந்து?

தெருவின்கண் காரணம் இன்றிக் கலங்குவர்க் கண்டு, நீ
வாரணவாசிப்பதம் பெயர்த்தல், ஏதில
நீ நின்மேல் கொள்வத; எவன் ?

அலர்முலை ஆய்இழை நல்லாய் கதுமென,
பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய
ஆர் அஞா எவ்வம் உயிர் வாங்கும்;
மற்று இந் நோய் தீரும் மருந்து அருளாய், ஒண்தொடீ!

நின் முகம் காணும் மருந்தினேன் என்னுமால்,
நின் முகம் தான் பெறின் அல்லது, கொன்னே
மருந்து பிறிது யாதும் இல்லேல், திருந்திழாய்!
என் செய்வாம்கொல், இனி நாம்?

பொன் செய்வாம்
ஆறு விலங்கித் தெருவின்கண் நின்று ஒருவன்
கூறும் சொல் வாய் எனக் கொண்டு, அதன் பண்பு உணராம்

தேறல், எளிது என்பாம் நாம்.
ஒருவன் சாம் ஆறு எளிது என்பாம், மற்று.
சிறிது, ஆங்கே-மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க’ என,
நானும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி.

பூண் ஆகம் நோக்கி இமையான் நயந்த நம்
கேண்மை விருப்புற்றவனை, எதிர் நின்று,
நாண் அடப் பெயர்த்த நய வரவு இன்றே. - கலி 60

சுணங்கு சூழப் பெற்ற முலை; இளம்பிறையின் இயல்பைக் கொண்ட நல்ல நெற்றி, நல்ல மாலையையுடைய மணம் கமழும் முகிலும் விரும்பும் கரிய கூந்தல்; கூர்மையான அழகு பார்ப்பவரின் கண் சென்று நுழைந்து பார்க்கும் நுண்மை-