பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 * அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

ஏற்பட்டது. யான் ஒருத்தியாகி வருந்துமாறு இவ் இரவுப் பொழுது கழியும் போலும்” என்று தலைவன் பிரிவு ஆற்றாத தலைவி தோழியிடம் பேசினாள்.

225. எவ்விதம் பெற்றாள் இத் திண்மை: பிரசம் கலந்த வெண் சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்தி, புடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல், 'உண் என்று ஒக்குபு பிழைப்ப, தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று, அரி நரைக் கூந்தற் செம்முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஒடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்? கொண்ட கொழுநன் குடி வறன் உற்றெனக், கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள், ஒழுகு நீர் நுணங்கு அறல் போலப், பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே!

- போதனார் நற் 110 “இனிய வெண்மையான பால், தேன் கலந்தது; சுவை யுள்ளது விரிந்த ஒளியுள்ள பொற்கலத்தில் அதனை ஊற்றி ஒரு கையில் ஏந்திக்கொண்டு புடைப்பாகச் சுற்றிய பூப் போன்ற மெல்லிய நுனியையுடைய சிறிய கோலை மற்றொரு கையில் ஏந்தி இதனை உய் என்று கூறிக் கோலை ஓங்கிய செயல் நிறைவேறாது போயிற்று தெளிந்த ஒளியையுடைய முத்துகளை உள்ளே பரவலாகப் போட்ட பொற்சிலம்பை அணிந்த ஒரு சிறு பெண் அது ஒலிப்பக் குதித்துக் குடிக்க மறுத்து ஒடினான் மெல்லியவாய் நரைத்த கூந்தலையுடைய செவ்விய முதுமைச் செவிலியர் அவளைத் தொடர்ந்து ஓடி யும் பிடிக்க முடியாமல் மெலிந்து கை விட்டனர். பந்தரின் கீழ் ஒடிய அச் சிறுபெண் ஏவல் மறுத்தாள். அவ்வாறு ஒடிய சிறு விளையாட்டை உடையவள் நல்ல அறிவும் ஒழுக்கமும் எங்கிருந்து உணர்ந்து கொண்டாளோ? தன்னை அடைந்த கணவனின் குடி வறுமைப்பட்டதாகத் தன்னைப்