பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S

297. சொன்ன சொல் மறந்தாரோ தலைவர் 'வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல் உருவக் குதிரை மழவர் ஒட்டிய முருகன் நற் போர் நெடு வேள் ஆவி அறுகோட்டு யானைப் பொதினி ஆங்களின் சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரியலம் என்ற சொல்தம் மறந்தனர் கொல்லோ - தோழி, - சிறந்த வேய் மருள் பனைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார் - நிலம் பக, அழல் போல் வெங்கதிர் பைது அறத் தெறுதலின்: நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு, அறுநீர்ப் பைஞ் சுனை ஆம் அறப் புலர்தலின், உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும் வழங்குநர் இன்மையின், வெளவுநர் மடிய, சுரம் புல்லென்ற ஆற்ற, அலங்கு சினை நார் இல் முருங்கை நவிரல் வான் பூச் சூரல்அம் கடுவளி எடுப்ப, ஆருற்று: உடை திரைப் பிதிர்வின் பொங்கி, முள் கடல் போல் தோன்றல - காடு இறந்தோரோ?.

- மாமூலன்சர் அகந்ானூறு 1