பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 .ே அன்பொடு புணர்ந்த ஐந்திணை - பாலை

அணிந்து தலைமை சான்ற கோசர்களின் திரண்ட பசிய காய் முற்றின பாகற் பழத்தைத் தின்னும், பறை போன்ற வட்ட மான கண்களையுடைய, தோகைகளையுடைய மயில்கள் மிக்க சோலைகளைப் பெற்ற துளு நாட்டைப் போன்று, பொருளில் லாதவராய் வரும் புதியவரைப் புரக்கும் நல்ல பண்புடைய நெருங்கிய சேரிகளைக் கொண்ட தலைமை யுடைய முதிய ஊர்களில் முகமறிந்த மக்களை உடையதாகுக!” என்று மகள் போக்கிய தாய் உரைத்தாள்

305. என் மகள் வல்லவளோ பாலையில் செல்ல?

வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும், இளந் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும், 'உயங்கின்று, அன்னை என் மெய் என்று அசைஇ, மயங்கு வியர் பொறித்த நுதலன், தண்ணென, முயங்கினள் வதியும்மன்னே! இனியே, தொடி மாண் சுற்றமும் எம்முள் உள்ளாள், நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி, நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என் சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி வல்லகொல், செல்லத் தாமே - கல்லென ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின், நீர் இல் அத்தத்து ஆர் இடை, மடுத்த, கொடுங் கோல் உமணர், பகடு தெழி'தெள் விளி நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும், கடுங் கதிர் திருகிய வேய் பயில், பிறங்கல் பெருங்களிறு உரிஞ்சிய மண்அரை யாஅத்து அருஞ் சுரக் கவலைய அதர் படு மருங்கின், நீள் அரை இலவத்து ஊழ் கலி பல் மலர், விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர், நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி, வைகுறு மீனின் தோன்றும் மை படு மா மலை விலங்கிய சுரனே? - கயமனார் அக 17 “செல்வம் பொருந்திய அழகிய மனையில் சிறிது நேரம் வந்து ஆடினாலும், தன் இளைய துணைவரான தோழி