பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (பாலை).pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை..த.கோவேந்தன் : 267

அமைந்துள்ள சுனை போன்று குளிர்ந்துள்ள மாடங்களில் அமைந்த எம் செல்வத்தையும் நினையாதவளானாள்.

அகன்ற பாறையைச் சார்ந்து வளர்ந்த அரும்பு முதிர்ந்து மலர்ந்த வேங்கை மரத்தின் ஒளியுடைய இலை கலந்து தொடுத்த மாலையை அணிந்து மெல்ல நல்ல மலை நாடன் பாராட்டிவர அப் பொய்யை மெய் என நினைத்து மயங்கினாள் மயங்கி, பந்து அடிக்கும் ஒலி போன்ற தாளத்துக்கு ஏற்பப் பலவகையாய் அடியிடுதலை உடை பrைவும் சிலவான செலவுகளை உடையனவுமான குதிரைகளை யும், வேலையும் உடையவன் எழினி அவன் ஏவி விட்ட தொழிலை முடிக்கும் பொருட்டு அவனுடைய ஒரு காலத்தும் கெடுதல் இல்லாத தம் வலிமை காரணமாக மிக்க தீப் பரவிக் கற்கள் சுடுகின்ற காட்டில் தம் தொழில் வலிமை உடைமை யால் அம்புகளைக் குறி தவறாது தொடுக்கும் வீரர் பிழிந்த தேனால் ஆன ந்றிய கள்ளை உண்ட மகிழ்ச்சியின்ால் பகைவரின் போர் முனையை வென்று பருத்த மெல்லிய மடியை உடையனவும் காளைகளுடன் கூடியனவுமாயுள்ள் ஆ நிரையைக் கொண்டு வந்து தருவர் அத்தகைய இடமான பகைவருடன் பொருந்திய பலவான நெறிகளில் ᎥᎯ06öᎧa முழைஞ்சுகள் வெடித்ததற்குக் காரணமான வேனிற் காலத்தில் என் மகள் நடந்து செல்லுதற்கு எங்ங்னம் வல்லவள் ஆவாள்?’ என்று மகள் போக்கிய தாய் அரற்றினாள் 350. என் தோழி நின்னுடன் வருவாள்! நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து, அன்பின் நெஞ்சத்து, அயாஅப்பொறை மெலிந்த் என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு கருங் கல்வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல் நெறி செல்வம்பலர் உவந்தனர் ஆங்கண், ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஒராங்கு ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும்