பக்கம்:அன்பொடு புணர்ந்த ஐந்திணை (மருதம்).pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகை - வகை - உரை : த. கோவேந்தன்

213


லும் தன்மையுடைய கூற்றைக் காரியம் என்று நினைத்துப் பார்ப்பாய்” என்று மனத்துடன் கூறி ஊடல் நீங்கினாள்.

245. பொய்யுரையால் ஊடல் நீங்குதல்

ஒரூஉ கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற முடி உதிர் பூந் தாது மொய்ம்பின ஆக, தொடிய, எமக்கு நீ யாரை? பெரியார்க்கு அடியரோ ஆற்றாதவர். கடியர் தமக்க யார் சொல்லத் தக்கார் மாற்று? வினைக்கெட்டு, வாய்அல்லா வெண்மை உரையாது கூறுஎன் மாயம், மருள்வாரகத்து. ஆயிழாய் நின்கண் பெறின்அல்லால், நின்உயிர் வாழ்கல்லா என்கண் எவனோ, தவறு?

ஃது ஒத்தன் புள்ளிக் கள்வன் புனல் சேர் பொதுக்கம் போல் வள் உகிர் போழ்ந்தனவும், வாள் எயிறு உற்றனவும், ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும், நல்லார் சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பும், தவறாதல் சாலாவோ கூறு. அதுதக்கது; வேற்றுமை என்கண்ணோ ஒராதி, தீது இன்மை தேற்றக் காண்டியாய் தெளிக்கு. இனித் தேற்றேம் யாம். தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார் தார் மயங்கி வந்த தவறு அஞ்சி, போர் மயங்கி, நீ உறும் பொய்ச் சூள் அணங்கு ஆகின், மற்று இனி யார் மேல் விளியுமோ கூறு. - கலி 88 கொடியின் தன்மையுடைய பரத்தையரின் புழுகு முதலிய வற்றில் பொருந்திய மயிர் முடியினின்றும் உதிர்ந்த பூந்துகள் நின் தோள்களிலே கிடக்க, எம்மை நீ தீண்டுவதற்கு யார்? எம்மைவிட்டு நீ நீங்குவாயாக. பிரிவை ஆற்றமாட்டாதவர் பிரிந்து செல்ல வல்ல பெரியவர்க்கு அடிமையோ? அல்லர்.

தலைவன் தலைவி உரைத்ததைக் கேட்டுக்“கொடுங் குணம் உடையவர்க்கு மாற்றம் சொல்லத் தக்கவர் யார்?’ என்றான்.