பக்கம்:அபிதா.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18 O லா. ச. ராமாமிருதம்

மழை மறுபடியும் பிடித்துக் கொண்டது. மரங்கள், ஒப்பாரியில் தலைவிரி கோலத்திலாடின. இலைகளின் சந்து வழி, காற்று கத்தியே தன் காமத்தைத் தீர்த்துக் கொள்வதுபோல் ஊளையிட்டது.

பக்கத்து அறையில் ஜன்னல் கதவுகளும் வாசற்கதவுகளும் 'பட்பட்’டென்று அடித்துக் கொண்டன.

சமையலறையில் ஏதோ சாமான் உருண்டது.

சாவித்ரி கவனிக்க எழுந்து சென்றாள்.

இத்தனை அமர்க்களத்தினிடையே ஜன்னல் கண்ணாடி மேல் மழை தாரை ஒன்றன் பின் ஒன்று இடையறாது வழிந்த வண்ணமிருந்தது.

மெளனக் கண்ணீர்.

சகுந்தலை இப்படித்தானிருப்பாள்.

மோன தாரை கழுவக் கழுவ கண்ணாடியே துல்லியமான மிருதுவாகிக் கொண்டிருப்பதுபோல் தோன்றிற்று.

இத்தனை பெருக்கின் மூலகாரணம் ஜலத்துளியின் முதற் கசிவிடம்போல் புஷ்பாஞ்சலியில் நெகிழ்ந்த இறைவனின் இதயம் இப்படித்தானிருக்குமோ?

2

குன்றையே அணைப்பது போல், அந்த இடத்தில் ரயில் லாடமாய் ஒடிந்தது. எத்தனை நாள் இந்த வளைவை நானும் சகுந்தலையும் நின்று வேடிக்கை பார்த்திருப்போம்! ரயில் கடந்த சூட்டில் துண்டித்து விழுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/24&oldid=1125648" இலிருந்து மீள்விக்கப்பட்டது