பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

潭4秒 அபிராமி அந்தாதி

பந்திப் பவர்அழி யாப்பர மானந்தர்;

பாரில்உன்னைச் சந்திப் பவர்க்கு எளி தாம்எம் பிராட்டிநின்

தண்ணளியே!

(எம்பெருமாட்டியே, உன்னை வணங்குபவர்கள் தேவர்களும் அசுரர்களும் ஆகிய ஆற்றலுடைய பெரியவர் கள்; உன்னைத் தியானிப்பவர்கள் நல்லவர்களாகிய திசை முகராகிய பிரமாவும் நாராயணமூர்த்தியும்; தம்முடைய திருவுள்ளத்துக்குள் அன்பினாலே கட்டி இன்புறுகிறவர் அழியாத பரமானந்த சொரூபியாகிய சிவபெருமான்; இவ்வளவு சிறப்புடைய உன் குளிர்ந்த அருளானது , . உலகத்தில் உன்னைத் தரிசிப்பவர்களுக்கு எளிதாக இருக்

கிறது. இது என்ன வியப்பு!

வந்திப்பவர்-வணங்குபவர். தானவர்-அசுரர். திசை முகர்-பிரமதேவர். பந்திப்பவர்-கட்டுபவர். சந்திப்பவர்தரிசிப்பவர்; 'மயில்வாகனனைச் சந்திக்கிலேன்' என்பது கந்தர் அலங்காரம். தண்ணளி-அருளினால் பெருகும் கொடை தண்ணளி எளிதாம். நீ இவ்வளவு அரியையாக இருந்தும் உலகில் நின்னைத் தரிசிப்பவருக்கு நின் தண்ணளி எளிதாக இருந்தது என்றபடி.

உன்னை வந்திப்பவர், உன்னைச் சிந்திப்பவர், உன் னைப் பந்திப்பவர் என்று கூட்டுக; இடைநிலைத் தீவகம்.

". . . ; ೩೯r೯೧೯7ಕ சிந்தையுள்ளே பந்திப்பதனால் அழியாப் பரமானந்தராக இருக்கிறார் என்ற குறிப்பும் தோன்றியது.1

இது அபிராமி அந்தாதியில் 14-ஆம் பாடல்.