பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 அபிராமி அந்தாதி

இத்தகைய ஞான சொரூபியான சிவபெருமானை மயக்கிய பேரழகுடையவள் எம்பெருமாட்டி.

பாகன் அகம் குழைவித்த பவித்ர பயோதரி' என்று ஒட்டக்கூத்தர் பாடுவார். இந்த ஞானமூர்த்தியின் உள்ளத்தை உருக்கினாள் அம்பிகை. மன்மதனை எரித்து ஞானக் கண்ணுடையவருடைய உள்ளத்தை மாத்திரமா கொண்டாள் பிராட்டி? அவருடைய பாதிப் பாகத்தையே வவ்விக் கொண்டாள். - - .

அவளுடைய அதிசய வடிவை எண்ணி, திவ்ய விக்ரஹா (621) என்றும், இறைவர் வாமபாகத்தை வவ்வியதை "எண்ணி, ரீகண்டார்த்த சரீரிணி (392) என்றும் லலிதா

சகசிரகாமம் பேசுகிறது.

. அம்பிகை இறைவருடைய வாமபாகத்தை வவ்வியது எப்படி? அவருடைய புத்தியை முதலில் வெற்றி கொண் டாள்; அதன் பிறகு அவர் திருமேனியில் இடப் பாகத்தில் குடியேறினாள். வெற்றி கொண்ட நாட்டில் குடியேறுவது மன்னர் வழக்கம். பலரை வென்று வெற்றி கொண்ட ஒரு பெரு வீரனை வெற்றி கொண்ட மன்னராகத் திகழ்ந்தார் இறைவர். அந்த மன்னரை வெற்றி கொண்ட மகாராணி யாக, சக்கரவர்த்தினியாக விளங்குகிறாள் இராஜராஜேக வரியாகிய அம்பிகை.

யாவரையும் ஜயித்தவன் காமன்; அவனை ஜயித்தவர் சிவபெருமான் அவரை ஜயித்தவள் அம்பிகை. இந்த வெற்றி அம்பினால் உண்டாகவில்லை; அன்பினால் உண்டாயிற்று. படை வகுப்பினால் உண்டாகவில்லை; பெரு வனப்பினால் உண்டாயிற்று. வன்மையால் அமைய வில்லை; மென்மையால் அமைந்தது.

காமத்தை வென்ற ஞானியாகிய சிவபிரான் அருள் உருவாகிய அம்பிகையின் தூய அழகுக்கு வசமாகி இரு பாதியிலே வைத்துக் கொண்டார். அவருடைய மதில் வென்று வாமபாகத்திலும் குடியேறிய பேரழகி அன்னை,