பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼研强’ அபிராமி அந்தாதி

பேர்துவாக, பத்மாஸ்னா என்றே ஒரு திருநாமம் தேவிக்கு உண்டு. * -

இந்தப்பாட்டில், வெண்திங்களோ, கஞ்சமோ என்றுசேர்ந்து வருவதனால் வெண்மையைக் கஞ்சத்திற் கும் கூட்டி, வெண்கஞ்சமோ என்றும் கொள்ளலாம். அம்பிகை வெள்ளைத் தாமரையில் கலைமகளாகவும் இருந்து கல்விக்குத் தெய்வமாக விளங்குவதை எண்ணிச் சொல்லியது இது என்றும் சொல்லலாம். ஸரஸ்வதி” என்றே ஒரு திருந்ாமம் எம்பெருமாட்டிக்கு உண்டு.

அம்பிகையின் திருக்கோலங்களை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே வந்த அபிராமி பட்துர், அந்த அந்தக் கோலத்தை அவ்வப்போது தியானித்துக் கொண்டே பாடினார். அவர் உள்ளம் உருகியது. வெவ் வேறு இடத்தில் வெவ்வேறு கோலத்தோடு இருப்பதாகத் தியானிக்கும்போது அந்த இடமும் அந்தக் கோலமும் அவருடைய உள்ளத்திலே இடம் கொள்கின்றன. அம்பிகை உறையும் இடங்களில் முக்கியமானது அன்பர் க்ளின் உள்ளம் அல்லவா?

"அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும் தொழும்பர்

உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே

என்பது மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்.

இந்தப் பக்தருடைய நெஞ்சு நெகிழ்கிறது. "உன்னைப்பற்றி நினைக்கவும், உன்னைத் தியானிக்கவும் இரண்க்கு ஒரு கருவியைக் கொடுத்திருக்கிறாயே! அந்த உள்ளமும் உன்னுடைய திருக்கோயில்தானே? என்று

விருகுகிறார். உடனே, !