பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவா வரம் 197

இளவஞ்சிக் கொம்பே!

என்றார். கொடியின் ஒரு கிளையையும் ລariu என்று சொல்லலாம். திருவாசகத்தில்,

கொடுக்கரிக் குன்றுரித் தஞ்சுவித்

தாய்வஞ்சிக் கொம்பினையே'

என்று அம்பிகையை வஞ்சிக்கொம்பு என்று மாணிக்க வாசகர் கூறியிருக்கிறார். வஞ்சி யென்பது ஒரு மரத்துக் கும் பெயர். ஆதலின் அம்மரத்தில் பூவுட்ன் விளங்கும் கொம்பு போன்றவளே என்றும் பொருள் கொள்ளலாம்.

இவ்வாறு மென்மை மிக்கவளாக இருக்கும் அம்பிகை தன் பெருங்கருணையினால் அடியவர்களை ஆண்டு கொள் கிறாள். பக்தர்களும் ஞானிகளும் பக்குவத்தினால் உயர்ந்து அவளுடைய பேரருளைப் பெறுகிறார்கள். ஆயினும் அவர்களைக் கேட்டால், 'எனக்கு என்ன தகுதியிருக் கிறது? அம்பிகை தன் பெருங் கருணையினால். ஒன்றுக்கும் பற்றாத அடியேனையும் ஆண்டு கொண்டாள்’’ என்று கூறுவார்கள். х -

யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்

யாவர்க்கும் கீழாம் அடியேனை-யாவரும் . . பெற்றறியா இன்பத்துள்வைத்தாய்க்கென் எம்பெருமான் மற்றறியேன் செய்யும் வகை' , ;

என்று மாணிக்கவாசகர் கூறுவதைக் காண்க,

இந்தக் குரலிலே அபிராமி பட்டர் பாடுகிறார். பக்குவம் இல்லாத எனக்கு அருள் செய்தாள் எம்பெரு மாட்டி. கனிமரம் பழுக்க வேண்டுமானால் அதற்குரிய காலம் உண்டு. பருவத்தால் அன்றிப் பழுப்பதில்லை,