பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

அபிராமி அந்தாதி

"உளங்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே சகல
கலாவல்லியே!”

என்று குமரகுருபரர் பாடுகிறார். கவிமழை உள்ளத்தே தெளிவு பெற்றவர்களிடமே உண்டாகும்.

"உள்ளத்தில் உண்மைஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளிஉண்டாகும்"

என்பார் பாரதியார்.

சிந்தனையிலே செம்மை பெறாதவன் கவி பாட இய லாது. ஆகவே அபிராமிபட்டர் தம் சிந்தையுள்ளே ஒளி உண்டாக வேண்டும் என்று வேண்டுகிறார். ஒளிமயமான திருமேனியை உடையவராகிய கணபதி உள்ளத்திலே நின்றால் அபிராமி அந்தாதி ஊற்று அங்கே எழும். அந்தப் பெருநூல் உள்ளத்திலே இடையறாது ஊற்றெடுக்க வேண்டும் என்று கணபதியை இறைஞ்சுகிறார். அவர் பாடிய கணபதி வணக்கச் செய்யுள் வருமாறு:

தார்அமர் கொன்றையும் சண்பக மாலையும்
சாத்தும்தில்லை
ஊரர்தம் பாகத் துமைமைந்தனே,உல
கேழும்பெற்ற
சீர் அபிராமிஅந் தாதிஎப் போதும்என்
சிங்தையுள்ளே
கார்அமர் மேனிக் கணபதி யேநிற்கக்
கட்டுரையே.