பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப் புகல் - , 94ፖ

கோலம் கொண்டு எழுந்தருளுகிறாள். கருவி கரணங் களுக்கு அப்பால் நுண்பொருளாக இருக்கும் பெருமாட்டி ஆருயிர்களை நோக்கி உருவமும் நாமமும் படைத்து வருகிறாள். அப்படி வரும் தாயை நெடுஞ்சேய்மையிலே கண்டு ஓடிக் காலைப் பற்றிக்கொள்ளுதல் நல்ல குழந்தை யின் இயல்பு. சில முரட்டுக் குழந்தைகளோ அன்னை எப்படி வந்தாலும் அவளுடைய கருணைச் செயலை உணராமல் மனம்போன போக்குப்படி ஒடுகிறார்கள். விட்டில் இருந்து அன்னை அன்புடன் ஊட்டும் உணவை நல்ல குழந்தைகள் உண்ணுகிறார்கள். பொல்லாத குழந்தையோ வீட்டுக்குப் புறம்பே போய் வீதியிலுள்ள மண்ணைத் தின்கிறது. வீடு அன்னையின் ராஜ்யம்.

அதற்குள் இருந்து விளையாடும் குழந்தை அன்னையைப் பற்றிக்கொண்டு நல்ல உணவைப் பெறுகிறது. அன்னை யின் அருள் எல்லையாகிய வீட்டைக் கடந்து புறம்போந்து , புழுதியையும் மண்ணையும் உண்ணும் குழந்தையை

அன்னை நாடி வந்து அடிக்கிறாள்; அடித்துத் திருத்து

கிறாள். அதுபோல எம்பெருமாட்டியின் அருள் எல்லை யில் நின்று அவளை அணுகிப் பணிந்து நலம் பெறுகிறார் கள் நல்ல பிள்ளைகள். அல்லாதவர்களோ அந்த எல்லைக் குப் புறம்பே வந்து பிரபஞ்ச வாசனையில் ஈடுபட்டு இந்திரியத்துக்குப் பொருளாகும் நுகர்ச்சிகளையே நுகர் கிறார்கள். தன்னை அணுகாமல் இவ்வாறு பிரபஞ்சச் சேற்றில் உழலுகிற குழந்தைகளைத் திருத்துவதற்காக எம்பெருமாட்டி அவர்களுக்குத் துன்பத்தைத் தருகிறாள். அவர்களுக்குத் தாயாக நிற்பினும் இப்பொழுது திருத்தும் பொருட்டு ஒறுப்பவளாக, நோயாக வருகிறாள். இதனை நினைந்து, r

அணுகாதவர்க்குப் பிணியே!

என்கிறார். பொல்லாத பிள்ளைகள் தம்முடைய தாயைப் பேயென்றும் நோயென்றும் சொல்லுவது வழக்கம்.