பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப் புகல் 23f

மகிழ்ந்த ஆசிரியர், பின்பு அமரருக்கும் அவளுக்கும் உள்ள தொடர்பையும் கூறி, இறுதியில் தம்முடைய உறுதிப் பாட்டைச் சொல்ல வருகிறார். மணியாகவும் ஒளியாக வும் அணியாகவும் அழகாகவும் பிணியாகவும் மருந்தாக வும் விருந்தாகவும் நிற்கும் அபிராமி பக்தர்களின் புகலிட மாக நிற்பவள். அவளை அறிந்துகொள்ளாத வரையில் நமக்கு புகலிடம் எங்கே என்ற ஐயமும் அச்சமும் மக்க ளுக்கு நேரும். பெரும் கூட்டத்தில் ஒளி மங்கிய மாலை நேரத்தில் அன்னையைப் பிரிந்த குழந்தை மாதர்களில், ஒவ்வொருவராக அணுகி முகத்தைப் பார்த்து ஏமாந்து போவது போல, மக்களும் தெளிவில்லாத மாயை காரண டிாக யாரைப் புகல் புகுவது என்று அறியாமல் உழலுகி. நார்கள். கானலை நீர் என்று எண்ணிக் கடுவெளி திரியும் மான் எத்தனை நேரம் நாடி ஒடித் தேடினாலும் நீரை அடையாது. முயற்சி மிக மிக நீரைக் காணாத ஏமாற்ற மும் அயர்ச்சியும் உண்டாகின்றன. அப்படி இன்றி திச் நிலையைக் கண்டு விட்டாலோ வேறு எதனிலும் நாட்டம் இன்றி அங்கேயே நின்று விடும். அதுபோலப் பிரபஞ்ச வாசனையில் ஈடுபட்ட உயிர்கள் யார் யாரையோ அணுகி அவர்களால் மேலும் மேலும் துன்பம் உண்டாவதையே காண்கின்றன. அம்பிகை ஒருத்திதான். தக்க பற்றுக்கோடு, என்பதை உணர்ந்து அந்தப் பெருமாட்டியின் திருவடித் தாமரையைப் பற்றிக்கொண்டால், அப்பால் வேறு ஒருவ ரையும் நாடிச் செல்லும் அவசியம் இராது.

வறுமையால் துன்புற்றவர்கள் தமக்குப் பொருள்.

உதவும் வள்ளல்கள் எங்கே என்று தேடுவார்கள். அவர்கள்

தேடி வந்தால் அவர்களது குறிப்பறிந்து வரையறையின் றித் தருவது வள்ளன்மை. திருவள்ளுவர்.

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலன்உடையான் கண்ணே உள'