பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

அபிராமி அந்தாதி

உச்சித் திலகம்
★ ★ ★

திலகம் பொருத்தந்தான். ஆனால் அது வைத்துக் கொண்டால் சில நேரத்தில் அழிவதாயிற்றே. எட்டாத செம்மை உதய சூரியன் என்று சொன்னால், இது கரைந்து போகும் செம்மையாயிற்றே! கிடைக்கும் பொருளாய், அணியும் பொருளாய், மதிக்கும் பொருளாய், செவ்வண்ணப் பொருளாய் இருப்பது ஏதேனும் உண்டானால், அதைச் சொல்லலாம்.

அப்படி ஒரு பொருள் இருக்கிறதே! மாணிக்கம் என்னும் செம்மணி பெரியவர்களால் மதிக்கத்தக்க செம்பொருள் அல்லவா? ஞானிகள் மதிக்கும் எம்பிராட்டிக்கு மணி நூலில் அறிவுடையவர்கள் மதித்துப் பாராட்டும் மாணிக்கத்தை உவமமையாகச் சொல்வது பொருத்தமாக இருக்கும். பழம் புலவர்கள் அவளை, "மாணிக்க வல்லி" என்று பாராட்டியிருக்கிறார்கள். ஆகவே மாணிக்கத்தை உவமை சொல்வதே பொருத்தம்.

உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம்.
★ ★ ★

இப்போது வேறு ஓர் யோசனை வந்து குறுக்கிடுகிறதே. மாணிக்கம் கைக்கு எட்டுவது; ஒளியுடையது; கரையாதது. எல்லாம் சரி. ஆனால் அது கடினமான தல்லவா? அம்பிகை வன்மை உடையவள் அல்லவே! அவள் மென்மையே உள்ளமாகவும் உருவமாகவும் படைத்தவள். கோமலாங்கி என்ற அவள் பெயர் மென்மையைக் குறிப்பதல்லவா? மென்மையாகவும், கைக்கு எட்டுவதாகவும், உயர்வான பொருளாகவும், செவ்வண்ணம் உடையதாகவும் ஒன்று கிடைத்தால் அதைச் சொல்லலாம்.