பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

அபிராமி அந்தாதி

சொல்ல நமக்கு என்ன இன்னல்? பலர் நல்லவர்களை இழித்துப் பேசுகிறார்கள். அன்பர் பெருமையை எண்ணாமல் வாழ்கிறார்கள். அவர்கள் பண்ணிய தீவினை, கருமம், அது அவர்களுக்கு நரகந்தான் கிடைக்கும்.

மெய்ஞ்ஞானியர்கள் எந்தச் செயலும் அவன் செயல் என்று இருப்பார்கள். அவர்களை எந்த வினையும் அடராது. இந்தப் பிறவியில் புதியதாக வரும் ஆகாம்யம் அவர்களைச் சாராது. புண்ணிய பாவங்கள் அவர்களைச் சேர்வதில்லை.

ஞானியர்கள் உடம்பு இருக்குமட்டும் நடமாடுவார்கள். அப்போது அவர்கள் இயங்குவதனால் பிற உயிர்களுக்குத் தீங்கும் நன்மையும் உண்டாகும்படி நேரலாம், அவர்கள் பிச்சை ஏற்று உண்ணுகிறார்கள். அப்போது சிறிது உணவு கீழே சிந்துகிறது. அதை எறும்புகள் உண்ணுகின்றன. அவை உண்டதனால் அவர்களுக்குப் புண்ணியம் சேர வேண்டும். நடக்கும் போது சில ஜந்துக்கள் காலடியில் நசுங்கிப் போகின்றன. அதன் விளைவாகப் பாவமும் அவர்களைச் சாரவேண்டும் ஆனால், அவர்கள் மனேநாசம் ஆனவர்களாதலின் புண்ணிய பாவங்கள் அவர்களைச் சாரா.

அப்படியானால் எறும்புகள் உணவு பெற்றதன் பயனாகிய புண்ணியமும், எறும்புகள் நசுங்கியதன் பயனாகிய பாவமும் பயன்தராமல் போய்விடுமா? எந்தக் கர்மத்துக்கும் பயன் உண்டு. அது ஊட்டாமல் கழியாது. இது நியதி. அப்படியானால் இந்தப் புண்ணிய பாவங்கள் . அநாமத்துக் கணக்கில் எழுப்படுவனவா?

இல்லை; அவற்றிற்கும் போக்கு உண்டு. இயல்பாகப் பிள்ளை பெறுகிறவர்களுடைய செல்வம் அப்பிள்ளைகளைச் சாரும். அவர்கள் பிள்ளை பெறாவிட்டால்