56
அபிராமி அந்ததி
யாகவே இருக்கிறான். சந்திரனோடு அவன் பகையாகிய பாம்பையும் அந்தத் திருமுடியில் காண்கிறோம். நஞ்சை யும் பாம்பையும் அலங்காரப் பொருளாகக் கொள்கிறவன் இறைவன். *
கங்கையும் இறைவன் திருமுடியில் இருக்கிறது. எல்லோருக்கும் துாய்மையைத் தரும் அது பகீரதனுடைய தவத்துக்கு இரங்காமல் அகங்காரத்தால் கோபம் அடைந்தது. அதனால் துய்மை கெட்டது: கலங்கியது. அது தெளிவு பெற்றுப் புனிதத்தை அடையும் வண்ணம் அதைத் தன் சடாபாரத்திலே தேக்கி வைத்துப் பிறகே உலகில் பாயவிட்டான் சிவபெருமான். பிறருக்குப் புனிதம் உண்டாக்கும் கங்கையின் மாசைத் தீர்த்த புனிதன் பரமசிவன், .
- புரிசடைமேல் புனலேற்ற புனிதன் தான்காண்'
என்று அப்பர் சுவாமிகள் அருளியிருக்கிறார். இவற்றை எண்ணியே,
- பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த புனிதரும்
என்றார். கொன்றையாகிய தூய மலர் விளங்கும் சடையின் மேல் மாசுடைய திங்களையும் பாம்பையும் கங்கையையும் வைத்துப் புனிதமாக்கியருளிய கருணையாளன் சிவபிரான்: அந்தப் பெருமானுடன் அம்பிகை உள்ளத்தே தங்கினால் அது தூய்மை பெறும்,
சிவபெருமானாகிய துணையுடன் கோமளமாகிய அம்பிகை தம் புத்தியில் எந்நாளும் பொருந்தி எழுந்தருளியிருக்க வேண்டும் என்பது அபிராமிபட்டரின் ஆசை.