பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

அபிராமி அந்தாதி

[அழகி, எம் தந்தையாகிய சிவபிரானுக்குரிய வாழ்க்கைத் துணைவி, என் பாசமாகிய விலங்கையெல்லாம் என்பால் கருணையினால் எழுந்தருளி வந்து அழிக்கும் சிந்துரம் போன்ற செவ்வண்ண மேனி உடையவள், மகிடாசுரன் தலையின்மேல் நிற்கும் அந்தரி, நீலநிறம் உடையவள், என்றும் அழிவற்ற கன்னிகை வேதனாகிய பிரமனுடைய கபாலத்தைத் தாங்கிய திருக்கரத்தை உடையள் ஆகிய அபிராமியின் தாமரை மலரைப் போன்ற திருவடிகள் என்கருத்தில உள்ளன,

தொடர்-விலங்கு. அரி-அரிக்கும்; அழிக்கும். ஆரணம். வேதம். கம்-தலை: இங்கே கபாலம். தரி-தாங்கும்.]

இறைவியைத் தியானம் செய்கிறேன் என்பது கருத்து. இது அபிராமி அந்தாதியில் 8-ஆவது பாடல்.