பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24


வெட்டிப்பேச்சுப் பேசுவதற்குக் காட்டில் யாரும் கிடைக்காததால் அது நகரத்துக்குப் போவதென முடிவு செய்தது.

தனியாகப் போவதை விடத் துணைக்கு யாராவது வந்தால் நன்றாயிருக்குமே என்று அந்த முயல் நினைத்தது.

அப்படி அது நினைத்துக் கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு ஒரு குட்டி முயல் வந்தது.

அந்தக் குட்டி முயலைப் பார்த்து இந்த ஆண் முயல் கேட்டது. “ஏய் குட்டி, எங்கே கிளம்பி விட்டாய்?”

“அண்ணா, காலையிலிருந்து பொழுதே போகவில்லை. அதுதான் உன்னைத் தேடிவந்தேன்” என்றது குட்டி முயல்.

“என்னைத் தேடி எதற்கு வந்தாய்? என்னிடம் வந்தால் பொழுது போய்விடுமா!” என்று கேட்டது ஆண் முயல்.

“நீ பல இடங்களுக்கும் செல்கிறவன். உன்னிடம் வந்தால் ஏதாவது கதை சொல்லுவாய். பொழுது பொடுக்கென்று போய்விடும்” என்று கூறிய குட்டி முயல்.

“எனக்கு கதை சொல்லத்தெரியாது. நான் இப்போது நகரத்துக்குப் புறப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். நீயும் கூட வருகிறாயா?” என்று கேட்டது ஆண்முயல்,