பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38


சிவபெருமான் அதன் கால்களுக்கு மிக விரைந்து செல்லும் ஆற்றலைக் கொடுத்தார். கதிரவன் செல்லும் வேகத்தில் நீ செல்லுவாய் என்று சிவலிங்கப் பெருமான் அந்த முயலுக்கு வரம் கொடுத்தார்.

முயல்கள் பந்தயத்தில் ஒடத் தொடங்கின. அந்தத் திடலில் அவை ஒடிய காட்சி கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது.

அம்பு போலப் பாய்வதும், சக்கரம் போல் சுழித்துத் தாவுவதும் பார்க்கப் பார்க்க வியப்புத் தோன்றியது. சிவபக்தி மிகுந்த அந்த முயல் ஒடத் தொடங்கியபோது மற்ற முயல்களைக் காட்டிலும் மிக வேகமாக்த் துள்ளிப் பாய்ந்து ஓடியது.

ஒரே பாய்ச்சலில் அது ஒடிக்கொண்டே இருந்தது. பந்தயம் நடக்கும் இடத்தைத் தாண்டி காட்டைத்