பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
59


எல்லாம் நம்பின. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக அந்தக் குகையின் எதிரில் அன்று நிலா விருந்து நடத்தின.

முயல் மறு நாள் காலை அரசவைக்குச் சென்று அமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.

அாசவை வேலையெல்லாம் முடிந்து கலையப்போகிற நேரம் ஒரு பூனைக் குட்டி ஓடி வந்தது. "அரசே, பக்கத்துக் காட்டுக்குப் போயிருந்தேன். அந்தக் காட்டரசன் நம் காட்டின் மீது படையெடுக்கத் திட்டமிட்டிருக்கிறான். அங்கே இதே பேச்சாய் இருக்கிறது. படை திரட்டுகிறார்கள். எப்போது பாய்ந்து வருகிறார்கள் என்பது தெரியவில்லை, எதற்கும் நாம் அணியமாக இருக்க வேண்டும்" என்று சொல்லி விட்டுச் சென்றது.

உடனே அவையில் இருந்த எல்லா விலங் களையும் போகச் சொல்லிவிட்டு அரசனும், அமைச்சர் களும் மட்டும் கமுக்கமாக இருந்து ஆலோசனை நடத்தினார்கள்,

படையெடுப்பை எப்படிச் சமாளிப்பது என்று ஒவ்வொரு அமைச்சனும் தம் தம் கருத்தை எடுத்துச் சொன்னார்கள்.

அமைச்சர் வேலனார் என்ற யானை, அரசே, எதிரிகளின் காட்டில் இருப்பவை அனைத்தும் வலுவில்லாத சிறு விலங்குகளே. அவைகளை நம் காட்டு