பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
65


இதே நேரம் வருவதற்குள் நீ எனக்கு விடைசொல்ல வேண்டும். உன் முயற்சியை நீ இப்பொழுதே தொடங்கலாம். நாளைப் பொழுதுக்குள் முடிவு தெரியாவிட்டால் நாம் போர் செய்வது உறுதி.

"படைத்தலைவர் புலியாரே, நம் படைகளையெல்லாம் ஆயத்த நிலையில் வைத்திருங்கள். எந்த நொடியும் கட்டளை பிறக்கலாம். அந்த நொடியிலேயே பகை மீது பாய நம் படைகள் அணிய மாகட்டும்.’’

சிங்கம் முயலுக்கு ஒப்புதல் கூறிய உடன், அதன் காலில் விழுந்து வணங்கி எழுந்து மற்ற அமைச்சர்களிடமும் ஆசி பெற்றுக் கொண்டு, அடுத்த காட்டை நோக்கிப் பாய்ந்து சென்றது.

அடுத்த காட்டில் ஆட்சி புரிந்தது ஒரு கிழட்டுச் சிங்கம். அதன் குகைக்குள் முயல் போய்ச் சேர்ந்த நேரத்தில் அது குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டி ருந்தது. குகை வாயிலில் யாரும் காவலுக்கு இல்லாததால் முயல் நேரே உள்ளே சென்றது.

பொதுவாகச் சிங்கங்கள் பகலில்தான் உறங்குவது வழக்கம். இரவில் அவை மிகச்சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் அந்தக் கிழட்டுச் சிங்கமோ அந்த இரவுநேரத்திலும் குறட்டை விட்டுக் கொண்டிருந்தது வியப்பாய் இருந்தது.

முயல் அதன் முன்னே போய்ச் சற்று தொலைவில் நின்று கொண்டு "மன்னவா, மன்னவா" என்று