பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
இரங்கூன் முயலும்
யானை வேட்டையும்

நமது தமிழ் நாட்டுக்குக் கிழக்கே ஒருபெரிய கடல் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். கண்ணகி சிலை இருக்கும் கடற்கரைக்குக் காற்று வாங்கச் செல்கிறோம். அங்கே அலைமோதிக் கொண்டிருக்கும் கடலில் இறங்கிக் காலை நனைத்துக்கொண்டால் ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. சில சிறுவர்கள் கடலுக்குள் இறங்கி அலைகளை எதிர்த்து நீந்திக் குளிப்பதைப் பார்க்கும் போது அவர்கள் அடையும் இன்பத்தை நாம் அளவிட்டுக் கூறமுடியாது.

இந்தக் கடலை நாம் வங்கக் கடல் என்று அழைக் கிறோம். இந்த வங்கக் கடலில் கப்பலில் ஏறிக் கிழக்கே சென்றால் ஆயிரம் கல் தொலைவில் இரங்கூன் என்ற நகர் உள்ளது. இரங்கூன் பர்மிய நாட்டின் தலைநகரமாகும்,