பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
73


காகத் தங்கின, அப்போது ஷான் நாட்டுச் சின்ன முயல், "இந்த யானை தூக்கி எறிந்ததில் என் முதுகெல்லாம் வலிக்கிறது?" என்றது.

'எனக்கு வயிற்றில் நல்ல அடி. இன்னும் வலிக் கிறது?" என்றது குட்டி முயல்.

"இந்த யானைக்கு ஒரு பாடம்காட்ட வேண்டும். நீ என்ன சொல்லுகிறாய்?"என்று கேட்டது ஷான் நாட்டுச் சின்னமுயல். -

"அது எவ்வளவு பெரிய விலங்கு. அதை நாம் என்ன செய்யமுடியும்?" என்று கூறியது குட்டிமுயல். இவ்வாறு பேசிக்கொண்டே அங்கிருந்து புறப்பட்டன. வழியில் வெட்டிக் கிடந்த ஒரு பள்ளத்தைக் கண்டன. இரண்டும் ஒரே தாவலில் அந்தப் பள்ளத்தைக் கடந்தன. -

"கொஞ்சம் நில். இப்படிச் செய்யலாமா?" என்று ஷான் முயல் கேட்டது.

"என்ன செய்யலாம்?" என்று கேள்விக் குறியோடு பார்த்துக் கொண்டே குட்டி முயல் கேட்டது.

"இந்தப் பள்ளத்தில் அந்தக் காட்டானையை விழச் செய்யவேண்டும். அது மேலே ஏற முடியாமல் தத்தளிக்கும் போது எங்களை வீசி எறிந்தாயே இப் போது எப்படி இருக்கிறது? என்று கேட்க வேண்டும் என்று சொல்லியது ஷான் நாட்டு முயல்,