பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
74


"அது எப்படிப் பள்ளத்தில் வந்துவிழும். பள்ளத்தைக் கண்டால் ஒதுங்கித்தானே போகும்" என்று சொல்லியது இரங்கூன் முயல்,

"பள்ளம் இங்கே இருப்பது அதற்குத் தெரியக்கூடாது. ஆனால் அது இந்த வழியாக வரவேண்டும். கண்ணைத் திறந்து கொண்டே அது பள்ளத்தில் விழ வேண்டும்" என்றது ஷான் முயல்.

"பாவம் விழுந்து அடிபட்டால் அதற்கு உடம்பெல்லாம் வலிக்குமே!’ என்று இரக்கப் பட்டது இரங்கூன் முயல்.

"நமக்கு வலிக்கிற மாதிரி அதற்கும் வலிக்க வேண்டும். அப்போது தான் அதற்குப் புத்தி வரும்!?? என்று சினத்துடன் கூறியது ஷான் முயல்.

ஷான் நாட்டு முயலின் கருத்துப்படி இரண்டு முயல் குட்டிகளும் செயல்புரிந்தன.

பக்கத்துக் கரும்புத் தோட்டத்தில் வெட்டிக் கிடந்த கரும்புகளை ஒவ்வொன்றாகக் கெளவி இழுத்து வந்தன. பள்ளத்தில் குறுக்கில் இருபது கரும்புகளை வரிசையாக அடுக்கின. அதை இலை தழைகளால் மூடின.

பள்ளத்தின் எதிரில் கரும்புகளைக் குறுக்கும் நெடுக்குமாகப் போட்டு வைத்தன. அந்தக் கரும்புக் குவியலிலிருந்து பள்ளத்தின் குறுக்காக, வரிசையாகக் கரும்பைப் போட்டன. பள்ளம் இருந்த இடத்திலிருந்து