பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐவரோடும் வைத்தார் 115 நின்று நம்மை உழலச் செய்யும் ஐவரோடும் நம்மை விரவும் படி இறைவர் படைத்திருக்கிருர்.

நாண் இலார் ஐவரோடும்

இட்டு என விரவ வைத்தார்.

அந்த ஐம்பொறிகளையும் நம்முடைய பாதுகாப்புக்குள் வைக்கும் ஆற்றல் நமக்குக் கிடைத்துவிட்டால் பிறகு அவா அற்று விடும். அதல்ை பிறப்புத் துன்பத்தை மாற்றிக் கொள்ளலாம். அதற்கு ஞானம் உதவும்.

உரன்என்னும் தோட்டியால் ஒரைந்தும் காப்பான்

வரன்என்னும் வைப்புக்கோர் வித்து’’ என்று திருவள்ளுவர் சொல்கிரு.ர்.

எம்பெருமான் எப்படி இருக்கிருர்? அவர் எல்லை இறந் தவர். இதுதான் அவர் வடிவம் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது. சிவபெருமான், திருமால், முருகன் என்ற மூர்த்தி களாய் ஆண் வடிவம் கொண்டு வருவார். அதைக் கொண்டு அவர் ஆண் என்று தீர்மானித்து விட முடியாது.

ஆண் அலார். - பராசக்தியாக எழுந்தருள்பவரும் அவரே, சக்திபேதங்கள் பல, அம்பிகையை உபாசிக்கிறவர்கள் அந்தப் பேதங்களை அறிவார்கள். எப்போதும் அன்னை, இராஜராஜேசுவரி, திரிபுர சுந்தரி என்று சொல்வார்கள். அதைக்கொண்டு பரம்பொருள் பெண் வடிவுடையது என முடிவுகட்ட இயலாது.

பெண்ணும் அல்லர். ஆணுக வருவார். ஆளுல் அதுவே அவருடைய இயற்கை உருவம் அன்று. பெண் வடிவம் ஏற்று அன்பர்களுக்குக் காட்சி தருவார். அந்த வடிவந்தான் அவருடைய இயல்பான திருவுருவம் என்று வரையறுக்க முடியாது. எல்லாமாய் இருந்தும் அவர் அவற்றைக் கடந்து நிற்பவர்.