பக்கம்:அப்பர் தேவார அமுது.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. இறைவர் அமைத்துள்ள நியதி

சிவபெருமான் அகில லோகத்தில் உள்ளவர்களையும் பாது காத்தருள்பவர். விண்ணில் உள்ளவர்கள் யாவரும் தம்மை தோக்கித் தவம் செய்பவர்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுப்பவர்கள். ஆணுலும் அவர்களுக்கு இறைவருடைய திருவருள் இல்லாவிட்டால் வாழ முடியாது. சிறிய வங்கி யிலுள்ளார் பலருக்குப் பணம் கொடுத்தாலும் அவர்கள் பெரிய வங்கியிலிருந்து பணம் பெறுவார்கள். அதுபோலத் தேவர் கள் எம்பெருமான விரும்பி அதனுல் தம் பதவியைக் காப் பாற்றிக் கொள்வார்கள்.

விண்ணினை விரும்ப வைத்தார்.

தேவர்களுக்கு உலகத்தில் நடைபெறும் வேள்விகளில் அவியுணவு கிடைக்கும். அவ்வாறு அவர்கள் அவியுணவு பெறும்படி உலகில் உள்ளவர்களை வேள்வி செய்யும்படியாக அருள் செய்பவர் சிவபெருமான்.

வேள்வியை வேட்க வைத்தார்.

இசை வல்லுநர்கள் பண்ணையும் பாட்டையும் பாடினுலும் அவற்ருல் மிக்க இன்பம் அடைபவர் அல்லர் அவர் தம் முடைய புகழைப் பாடும் பாடல்களாக இருந்தாலும் பாடுபவர் மனம் ஒன்றி அவரை எண்ணிப் பாடினல் அப்போதுதான் அவர் திருவுள்ளம் மிக்க உவப்பை அடையும். பாட்டுக் காகவும் பண்ணுக்காகவும் பாடுகிறவர்கள் வெறும் கலைஞர் கள். அத்தகைய பாடல்களைப் பக்தர்கள் பாடும் பொழுது அவர்கள் பாட்டின் பொருளாகிய இறைவருடைய நி.ை வோடே பாடுவார்கள்; பலகாலும் பயின்று பாடுவார்கள் அவர்கள் பாட்டைக் கேட்டுத் திருவுள்ளம் உவப்பவர் சி