பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கெஞ்சிக் கதை

83

உருப்

இத்துடன் அவள் திருப்தி அடையட்டும். பெண்டிர் மொழிநடைக்குச் சிறிதும் ஒவ்வாத சிறிதும் ஒவ்வாத முறையில் சீன வடிவங்களுடனேயே எல்லா எழுத்துகளையும் போட்டுவிட அவள் முனைந்துவிடக்கூடாது ஏனெனில் அத்தகைய கடிதங்களைப்பெறுபவர். 'ஐயோஇந்த ஆண் மாரித்தனம் சற்றுக் குறைந்து சிறிது பெண்மைக்கு இடமிருந் திருக்கக் கூடாதா? என்றே ஏங்குவர். பேச்சு நடையில் இந்தச் சீனக் குறியீடுகளுக்குரிய ஒலிப்பையே எழுதியவர் குறித் திருக்கலா மானாலும், அவற்றின் சீனக்கலப்பையே கருத்துள் கொண்டு வாசிப்பவர் இன்னும் மிகுதியாகத் திணறக் கூடும். புத்தம் புதிய பாணியை மேற்கொள்ளும் நம் உயர்குடி நங்கையரிடங்கூட இம் மாதிரிப் பெண்கள் உண்டு. அத்துடன் வேறு பலர் செய்யுளமைதியைத் தம் வயப்படுத்திவிட எண்ணி, இறுதியில் தாமே அதன் வயப்பட்டு அதற்கு அடிமையாகி விடுகிறார்கள். காரியம் எவ்வளவு அவசரமானதா யிருந்தாலும், நேரம் எவ்வளவு பொருத்தமற்றதானாலும் தம் நினைவில் எழுந்த சில மேற்கோள் உவமையணி நயங்களை விடாது புகுத்தும் எண்ணத்துடன் அவர்கள் தம் எழுத்து மேடையருகே சென்று குந்திக் கொண்டு கவிதையி லாழ்ந்து விடாமல் இருக்க முடிவதில்லை.

விழா நாட்களில் இத்தகைய அணங்கு மிகவும் தொல்லை தருபவள் ஆகிறாள். வானவில் அணங்கின் விழாவிலே எல்லோரும் அவள் அவ்விழாவின் குறியீடான ஒன்பது மலர் இணைந்த வேர் பற்றிய பழங் குறிப்புகளைத் தேடிக் கோத்துக் கொண்டு எல்லோருக்கும் தொந்தரவு உண்டு பண்ணுவாள். ஒன்பதாவது மாதம் ஒன்பதாவது நாளில் மற்றெல்லாரும் தத்தமக்கு அளிக்கப்பட்ட எதுகைச் சட்டத்திற்கேற்ற நொற்களைத் தேடிக் கொண்டிருக்கும் சமயம், அவள் பொன்னரளி மலர் மீது உள்ள பனித்துளியை அதனுள்ளே உவமையாகத் திணிக்க முயன்று, அதற்காகத் கைவசமுள்ள முக்கிய வேலையி லிருந்து எல்லார் கவனத்தையும் நழுவச் செய்வாள். மற்றும் சில சமயம் அவர்கள் இயற்றியவை இயல்பாக இன்பமளிக்கத் தக்கவையாய் அமைந்திருந்தாலும், அவள் வேளை வாய்ப்புகளைக் கவனியாமல் தவறானநேரத்தில் அவற்றைப் அவற்றைப் பிறர்மீது திணிப்பதால் நச்சரிப்புக் குரியவள் ஆகிவிடு கிறாள் அவற்றை