பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




88

அப்பாத்துரையம் - 22

அவர்கள் உணவுக்கு ஏதேனும் கொண்டு வருவதாகக் கூறிக் கொண்டு கீ நோ கமி அவசர அவசரமாகச் சென்றான்.

கெஞ்சி அமைந்த உள்ளத்துடன் சூழலிலுள்ள காட் சியழகைக் கண்டு களித்தான்.

பெண்ணினம் பற்றிய சென்ற இரவின் உரையாடலிலே, நடுத்தர வகுப்புத்தான் நண்பர் அனைவரின் பேரளவு பாராட்டுக்கும் உரியதாயிருந்தது. தான் இப்போது காண வந்ததும் அத்தகைய ஒரு குடும்பமே என்று கெஞ்சி உணர்ந்தான். வீட்டிலுள்ள மாதரசியை மாதரசியை எல்லாரும் புகழ்வது கேட்டு. அவளைக் காண அவன் ஆவலுடையவனாய் இருந்தான். இந்நோக்கத்துடன் நின்ற அவன் செவிகளில் மனையின் மேல் சிறகில் மனித அரவங்கள் கேட்பன போலிருந்தன. அவன் உற்றுக் கவனிக்கலானான். பெண்டிர் மெல்லாடைகளின் சலசலப்பு, காதுகள் விரும்பிக் கேட்கத்தக்க இளங்குரல்கள் அவ்வப்போது எழுந்தன.

னிய

அவர்கள் அடங்கிய குரலில் பேசுவது போலவும் நகைப்பது போலவுமே தோற்றினாலும், உண்மையில் எவரும் கேட்காதபடி பேச வேண்டும் என்ற கவலை கொண்டவர் களாகத் தெரியவில்லை. ஏனென்றால் இளங்குரலுக்குரியவர்களுள் ஒருத்தி இளவரசன் தங்கிய திசை நோக்கிய ஒரு பலகணியைத் திறக்கத் தொடங்கினாள். 'இது என்ன தகாவேலை?' என்று கண்டித்த வண்ணம் கீ நோ கமி அதை மீண்டும் மூட வேண்டிய தாயிருந்தது.

அறையிலிருந்த ஒரு விளக்கின் ஒளி தாளட்டையாலான பலகணியின் ஒரு கீறல் வழியாக வெளியே தெரிந்தது. கெஞ்சி இப்பலகணியின் அருகாக மெல்ல நகர்ந்து அதன் வழியாக உள்ளிருப்பவர்களைக் காண அவாவினான். ஆனால் அவ்வழியே எதுவும் காணமுடியவில்லை. பெண்களனைவரும் அவர்களுக் குரிய நடு அறையிலேயே இருந்தார்களென்றும், அதனையடுத்த வெளியறையிலேயே தன் பார்வை சென்ற தென்றும் ஊகித்தான்.

.

அவர்கள் மிகத் தாழ்ந்த குரலில் தான் பேசினார்கள். ஆயினும் ஆங்காங்கே தெளிவாகக் கேட்ட சில சொற்கள் மூலம் அவர்கள் தன்னைப் பற்றித் தான் பேசினார்களென்று கெஞ்சி எளிதாக அறிய முடிந்தது.