பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




136

||-

அப்பாத்துரையம் - 22

கூறியபடியே தான் அவளை நடத்திய முறை மிக மோசமானதே என்று கெஞ்சி இப்போது உள்ளூர ஒத்துக்கொண்டான். அவள் வன்கண்மை தன்னை எவ்வளவு புண்படுத்தினாலும் இப்போது இயோவைக் கண்டபின் அவள் விட்டுக் கொடுத்து வளையா திருந்தது பற்றிக் கெஞ்சி கிட்டதட்ட ஆறுதலே அடைந்தான்.

இயோ இப்போதுகெஞ்சியிடம் தன் குடும்பத் தகவல்கள் கூறினான். ‘என் மகளுக்குத் திருமணமாக இருக்கிறது. ஆகவே நான் என் மனைவியை என்னுடன் மாகாணத்துக்கே இட்டுச் செல்லப் போகிறேன்' என்றான். இது கெஞ்சிக்கு எதிர்பாரா இரட்டை அதிர்ச்சியாய் அமைந்தது, இனி எப்படியும் அவன் உத்சுசேமியைக் கண்டு தீர வேண்டும். இது பற்றி அவன் சிறுவனுடன் பேசினான். சிறுவன் அவனுடன் அது பற்றி வாதிட்டான்.

இளவரசருடன் எவரும் அன்றைய சூழ்நிலையில் இத்தகைய மறைவான தொடர்பு வைத்துக் கொள்வது என்பது கடினமானது. ஆனால் மதிப்புப் படியில் தாழ்ந்தும் சிக்கல்கள் சூழ்ந்தும் இருந்த உத்சுசேமியின் வகையில் இது முற்றிலும் எண்ண முடியாததாகவே அமைந்தது. ஆயினும் இச்சூழலிலும் அவனுடன் எல்லாத் தொடர்புகளையும் அறுத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. முன்னைவிட நய இணக்கத்துடன் அவள் அவன் கடிதங்களுக்கெல்லாம் மறுமொழி வரைந்து வந்தாள். அத்துடன் மேற்பார்வைக்குக் கருத்தற்ற மொழிகளி லேயே உன்னிப்பாகக் கவனித்துச் சிறு சிறு குறிப்புகள் தீட்டுவதன் மூலம் தன் உள்ளத்தில் தான் அவனுக்குத் தந்துள்ள டத்தையும் தெரிவிக்க அவள் முனைந்தாள்.

இவற்றுள் எதனையும் அவன் நோக்காது விடவில்லை என்றாலும் தன்னிடம் நெகிழ்ச்சி காட்டவில்லை என்ற வருத்தம் அவனுக்கு இருந்தே வந்தது. அவள் நினைவை மனத்தைவிட்டு அகற்றவும் அவனால் முடிய வில்லை.

மற்ற அணங்கின் வகையில் கெஞ்சி கவலைப்படுவதை நிறுத்திக் கொண்டான். சரியான வகையில் ஒரு கணவனைப் பெற்ற பின் தனக்காக மனவேதனைப் பட்டு நலியும் பெண்ணல்ல அவள் என்பதை அவன் உணர்ந்தான். அவள் வகையில் இப்போது அவனுக்கு மொத்தத்தில் மன அமைதியே ஏற்பட்டது.