பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




148 || -

அப்பாத்துரையம் - 22

புதியதாகவும் இனிமையாகவும் இருந்தது. ஆனால் இந்த இசை இனிமைக்கு அணிமை மட்டுமே காரணமன்று. இந்த இடத்தில் அவன் விருப்பத்துக்குரிய பொருள் ஒன்று இருந்து எல்லா வற்றுக்கும் இனிமை தந்தது. அவற்றின் குறைபாடுகளை அகற்றி அவற்றின் இனிமைக்கு ஓர் இனிமைச் சாயலும் கவர்ச்சி வண்ணமும் தந்தது.

அவள் ஒரு வெண்ணிறக் கச்சணிந்து, அதன் மீது மெல்லிய மங்கிய சாம்பல் நிற மேலாடை இட்டிருந்தாள். இது மிக எளிய ஆடையே யானாலும், அவள் வகையில் சிறப்பும் தனி எழிலும் தந்தது. இவற்றுக்குக் காரணமாக அவள் தோற்றத்தில் எதையும் குறிப்பிட்டுக் கூற முடியாது. அவள் நலிவிடையே காணப்பட்ட நயமும் நேர்த்தியும் மட்டுமே இவற்றுக்குத் தூண்டுதல் தந்தன. ஆனால் அவள் உண்மை அழகொளி அவள் வாய் திறந்து பேசிய சமயத்தில்தான் தழைத்தது. அதில் அத்தனை உணர்ச்சியும். அத்தனை அவா ஆர்வமும் தெறித்தன. அவளுக்கு மட்டும் இன்னும் சிறிது கிளர்ச்சி இருந்திருந்தால்! ஆனால் இந்நிலையிலேயே அவள் கவர்ச்சி அள்ளிக் கொள்வதாய் இருந்தது.

தம்மை யாரும் அணுகாத ஓரிடத்துக்கு அவளை இட்டுக் கொண்டு சென்று அமைதி குலையாத இடையறா இன்ப நுகரும் பேரவா அவனுக்கு ஏற்பட்டது. 'மிகு தொலைவல்லாத ஓரிடத்துக்கு உன்னை இட்டுச் செல்லப் போகிறேன். அங்கே இரவின் மீந்த பகுதியை அமைதியுடன் கழிக்கலாம். இப்படி ஒவ்வொரு நாளும் நாம் விடியற் காலந்தோறும் பிரிந்து கொண்டு இருக்க முடியுமா?' என்றான். 'இத்திடீர் முடிவுக்கு இப்போது வருவானேன்?' என்று அவள் கேட்டாள். ஆனால் அவள் தொனியில் பணிவு மிகுதியாய் இருந்தது. அப்போது அவன் ‘இந்தப் பிறப்பில் மட்டுமன்று, வரும் பிறவிகளி ளெல்லாம் நீயே என் உயிர்க் காதலாயிருக்க வேண்டும்' என்றான். இதற்கு அவள் விடையளிக்கும் சமயம் அவள் உணர்ச்சி வேகம் கொண்டாள். இவ்வேகம் இதுவரை எதிலும் அக்கறையற்றிருந்த அவள் அவல நிலையை முழுதும் மாற்றி அவளுக்குப் புத்தெழுச்சி தந்தது. இத்தகைய உறுதிமொழிகள் அவளுக்குப் புதிதாயிருக்க முடியாது என்று இச்சமயத்தில் அவனால் எண்ணாதிருக்க முடியவில்லை.