பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




178

-

ஏனெனில் ஒருதடவை

அவள்

அப்பாத்துரையம் - 22

அணியழகுக்காகக்

குறிப்பிட்டதுபோல, அவள் உண்மையிலேயே ஒரு மீனவன் மகளாயிருந்தால்கூட, அவளை இவ்வளவு உண்மையாகக் காதலித்த ஒருவனிடம் இவ்வளவு பிடிவாதமாக ஒளிவு மறைவு காட்டுவது விசித்திரமல்லவா?' என்றான்.

உகான் மறுமொழி கூறினாள். 'தன் பெயரை அவள் ஏன் கூறவில்லை யென்று கேட்கிறீர்கள்? கூறாததில் என்ன வியப்பு?' பெயர் தெரிவதனால் உங்களுக்கு எதுவும் வந்துவிடப் போவதில்லை. ஆனால் அதை கூறத்தக்க வேளை என்று நீங்கள் எந்தக் காலத்தைக் குறிப்பிட முடியும்? தொடக்கத்திலிருந்தே நீங்கள் அவளை மிக விசித்திரமான அவநம்பிக்கையுடன் நடத்தினீர்கள். மறை வொளிவுடனும் இரகசிய இரகசியமாகவும் நீங்கள் வந்து கண்டதால், நீங்கள் இதே மனித உலகத்தவர் தானா என்று கூடக் கூறுவதரிதாக இருந்தது. இது மட்டுமன்று. நீங்கள் யாரென்று அவளிடம் ஒன்றும் சொல்லாவிட்டாலும், அவள் அதை நன்கு அறிந்து கொண்டு தானிருந்தாள். அவளை ஒரு தற்காலிக விளையாட்டுக் கருவியாகவோ, கவலை நேர ஆறுதல் பண்டமாகவோ மட்டுமே கருதியிராவிட்டால், வ்வளவு இரகசியம் பேணியிருக்க மாட்டீர்கள் என்ற எண்ணம் அவளை உள்ளூர அறுத்து வந்தது' என்றாள்.

ஆ, ஒருவர் பற்றி ஒருவர் எத்தனை தொடர்ந்த தப் பெண்ணங்கள்?' என்று தொடங்கினான் கெஞ்சி. 'என்னளவில் அவளுக்கும் எனக்கும் இடையேயுள்ள தொடர்பைத் தொலைவுடையதாக்கு எண்ணம் எனக்குச் சிறிதும் இருந்ததில்லை. உண்மை என்ன வென்றால் இது போன்ற செய்திகளில் எனக்கு அனுபவம் கிடையாது. என் நிலையில் உள்ளவர்களுக்கு இவ்வழியில் எத்தனையோ எதிர்பாராத தனிப்பட்ட இடை ஞ்சல்கள் உண்டு. முதலாவதாக, முதன்மை யாக, சக்கரவர்த்தியாகிய என் தந்தையின் கோபத்துக்கு நான் அஞ்ச வேண்டும். அதற்கடுத்தபடி உலகமக்களின் அறிவில்லாக் கேலி உரைகளுக்கும் நான் அச்சங்கொள்ள வேண்டும். இவை தவிர அரண்மனை ஒழுங்கு முறைகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் நான் நாற்புறமும் சூழப்பட்டிருக்கிறேன். இவ்வாறு என் பதவி என்மீது சுமத்திய இந்த வெறுக்கத்தக்க ஒளிவு