பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(188)

அப்பாத்துரையம் - 22

உருவம் அன்றும் தோற்ற மளித்தது. அந்த இல்லத்தை ஆட்கொண்ட ஏதோ ஒரு பூதம் அந்தப் பயங்கர முடிவுக்குக் காரணமாயிருந்து, அது முதல் தன்னுள்ளும் புகுந்திருக்குமோ என்றெண்ணி அவன் கலங்கினான்.

இயோ நோ சுகே இறையிலா மாதத் தொடக்கத்தில் புறப்பட இருந்தான். மனைவியையும் உடன் கொண்டு போவதாக அவன் தெரிவித்தான். கெஞ்சி பிரிவுகாலப் பரிசுகளாகப் பல நல்ல பல நல்ல பொருள்களை அனுப்பினான். அவற்றுள் தனிக்குறிப்பு உட்கொண்ட மிக நேர்த்தியான சீப்புகளையும் சேர்த்திருந்தான். பயணத் தெய்வத்துக்குக் காணிக்கை யளிக்கும்படி பல பட்டாடைகளும் இருந்தன. இவை மட்டுமன்று. உத்சுசேமி முன்பு நழுவ விட்டிருந்த கைச் சதுக்கத்தையும் அவன் அனுப்பி விட்டான். அதனுடன் ஒரு பாடலை அவன் இணைத்திருந்தான். சந்திக்கும் ஆர்வ நம்பிக்கை இருந்த அளவும் தான் அதை அவள் நினைவூட்டாக வைத்திருந்ததாகவும், வீணேவடித்த கண்ணீரால் நனைத்த பின் அதைத் திருப்பி அனுப்புவதாகவும் அதில் குறித்திருந்தான். பாடலுடன் நெடு நீளமான ஒரு கடிதமும் இருந்தது. ஆனால் அது இங்கே தரப்படவில்லை, அந்த அளவுக்கு அதில் எத்தகைய முக்கியத்துவமும் கிடையாது.

பரிசுகளைக் கொண்டு வந்த மனிதனிடம் அவள் எத்தகைய விடையும் அனுப்ப வில்லை. ஆனால் தன் தம்பி மூலம் அவள் ஒரு பாடலை அனுப்பினாள்.

'மாறுபடும் பொன்சிறைத் தும்பிக்கு நீங்கள் வீறுபடும் வேனிலுடை மீட்டளிக்கும் வகையால் வேறு படுவீர் அல்லீர் மாறு படல் கண்டே

ஊறுபடும் வேதனையால், சிற்றுயிரென் உள்ளம்!’

நீண்ட காலம் அவளைப்பற்றி அவன் எண்ணி எண்ணி நொந்தான். இறுதி வரை புரிந்து கொள்ள முடியாத விசித்திர உறுதியுடன் அவள் உள்ளத்தை அவனுக்கெதிராக எஃகாக்கிக் கொண்டிருந்தாள். இருந்த போதிலும் இனி மீளாத நிலையில் அவள் அகன்று விட்டாள் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் எழுந்தோறும், அவள் நெஞ்சம் மகிழ்ச்சி யிழந்து மறுகிற்று.