பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




206

||-

அப்பாத்துரையம் - 22

கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இதை உங்கள் தங்கைக்குத் தெரிவிக்கக் கோருகிறேன். என்னை இளமையிலேயே பிறர் மணவாழ்வில் சிக்க வைத்திருந்தாலும், அவர்கள் தேர்வு எனக்குப் பிடிக்கவில்லை. சமுதாய வாழ்வில் எனக்கு மிகுதி விருப்ப மில்லாத நிலையில் நான் தனியாகவே வாழ்கிறேன். அவள் இப்போது சிறு குழந்தையாகவே இருப்பதை அறிவேன். அவளை மணங்கோரவில்லை...'

இங்கே கெஞ்சி தயங்கினான். துறவி அதற்குள் மறு மொழி தொடங்கினார்.

'இந்த ஆர்வ உதவியுரைக்கு நான் நன்றியுடையேன். ஆனால் நீங்கள் குறிப்பிடும் குழந்தை இன்னும் மிக மிகச் சிறு குழந்தை என்பதை நீங்கள் கவனிக்கவில்லை. ஒரு சிறு பொழுது போக்குக்குக்கூட அவள் பயன்படாதவள். உண்மையில், அவளளவில், வளரும் பருவத்தில் அவள் முன்னேறுவதற்குரிய சக்தி வாய்ந்த பக்க ஆதரவு வேண்டுவதேயாகும். எனினும் இவ்வகையில் நான் எதுவும் நலமாக முடித்துவிடுவேன் என்று வாக்குறுதி தர முடியாதவனாயிருக்கிறேன். குழந்தையின் பாட்டியிடம் இதைக் கூறுவதற்கு மட்டுமே தற்போது நான் இணங்க முடியும்' என்றார்.

துறவியின் தோற்ற நடையுடை பாவனைகளில் இப்போது சிறிது திடீர்க் கடுமையும் தயக்கமும் தோற்றின. உரையாடலை வரம்புமீறி நெடுந்தொலைகொண்டு சென்று விட்டதாக நினைத்துக் கெஞ்சி மௌனமாக இருந்தான். அவன் உள்ளத்தில் உள்ளூரக் குழப்பமும் ஏற்பட்டது.

'எம்பிரான் அமிதபகவான் திருக்கூடத்தில் எனக்கு அலுவல் இருக்கிறது. ஆகவே சிறிது நேரம் நான் உங்களிட மிருந்து விடைபெற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. என் வழிபாட்டு நேரமும் அணுகிவிட்டது. நான் பின்னால் வந்து உங்களைக் காண்கிறேன்' என்று கூறித் துறவி வெளியேறி மலைமீது சென்றார்.

கெஞ்சி ஆறுதல் பெறமுடியாத அவல நிலையில் இருந்தான்.