பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அப்பாத்துரையம் - 22

12 |_ அடிக்கடி நெருக்கிய இடைவழிகள், சுரங்கவழிகள் படிவளைவுகள் புழைக்கடை வாயில்களினூடாகச் சென்றது இங்கே பகைவர், ஏவலாட்கள் ஆகியோரின் குறும்புச் செயல்களுக்கு ஆளாகி, அவள் பரிவாரப் பெண்டிர் சிவிகைக்காரர் ஆகியோர் பல வகைப்பட்ட தீங்குகளுக்கு உட்பட்டனர். இது அவள் மதிப்பைப் பெரிதும் ஊறுபடுத்திய தோடல்லாமல் சிற்சில சமயம் அவளுக்கே ஆபத்தாகவும் அமைந்தது.

ஒரு சமயம் யாரோ புழைக்கடை வாயிலொன்றைப் பூட்டி விட்டனர். பாவம் சிவிகை செல்லா இடங்களைக் கடக்க எண்ணி அவள் வேலையாட்களுடன் வேலையாளாகக் கால்நடையாய் நெடுந்தூரம் அலைந்து திரிய நேரிட்டது.

இவற்றையெல்லாம் கேள்வியுற்றுச் சக்கரவர்த்தியின் உள்ளம் உருகிற்று. அவள் துயரை காணப் பொறாமல் அவர் அவள் தங்குமிடத்தை உடனடியாகக் கோரோடன் மாளிகைக்கு மாற்றும்படி உத்தரவிட்டார்.

இது துயர வெந்தீயை ஆற்றுவதாக அமையவில்லை; அதில் எண்ணெய் ஊற்றுவதாகவே முடிந்தது. ஏனெனில், கோரோடன் மாளிகை ஆடையணி அரங்கத்தின் தலைமைச் சீமாட்டிக்கு உரியது. சீமாட்டிக்கு வழி செய்வதற்காக அவள் அதை ஒழித்து விட்டுச் செல்ல வேண்டி வந்தது . சீமாட்டிக்கு ஏற்கெனவே இருந்த மற்றப் பகைவர் போதாதென்று இப்போது புதியதொரு பொல்லாப் பகையும் எழுந்தது.

புதிய இளவரசனுக்கு இப்போது வயது மூன்றாயிற்று. .அவன் காலுறைபூட்டு விழா பட்டத்து இளவரசன் விழாக் களுக்கு ஒரு சிறிதும் குறையாத ஆடையணி அலங்கார ஆடம் பரங்களுடன் நடைபெற்றது. பேரரசின் கருவூலத்திருந்தும், திறை மாளிகையிலிருந்தும் விழாவுக்கான பரிசில்கள் மேன் மேலும் வந்து குவிந்த வண்ணமாயிருந்தன. இதுவகையிலும் பல சைகளிலிருந்தும் கண்டனங்கள் எழாமலில்லை. ஆயினும் குழந்தை இளவரசனைப் பொறுத்தவரை இவற்றால் எத்தகைய தொல்லையும் ஏற்படவில்லை. ஏனெனில் அவன் அழகு நாளொரு மேனியாக வளர்ந்த வண்ணமிருந்தது. நடையுடை பண்பு நயங்களும் கண்டவர்களையெல்லாம் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்துபவையாகவே அமைந்தன. 'பண்பழிவுகளே பெருகி வரும்

ரு