பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

||-

அப்பாத்துரையம் - 22

வகுப்பிலேயே சேர்க்கப்பட வேண்டுமென்று எண்ணுகிறேன். ஏனெனில், அவர்கள் வாழ்வு ஓயாது உயர்வு தாழ்வுகளுக்கு ஆளாகின்றது.

இன்னும் இவர்களன்றி, அமைச்சரவை மதிப்பற்ற மூன்றாம்படி நான்காம்படி அமைச்சர்கள் இருக்கின்றார்கள். பொதுவாக நாள்முறை வேலைகளில் உழலும் பொதுநிலைப் பணியாளர்களுக்குத் தரப்படும் மதிப்பைவிட, இவர்களுக்குக் கிடைக்கும் மதிப்புக் குறைவேயாகும். அவர்கள் நல்ல குடியில் பிறந்தவர்களே. அத்துடன் அரசியல் அமைச்சர்களைவிட அவர்கள் பொறுப்புக் குறைவு. அவர்கள் மன அமைதி இதனால் பெரிதாகிறது. இத்தகைய குடும்பங்களில் பிறந்த பெண்மணிகளுக்கு வறுமையின் துன்பம் சிறிதும் கிடையாது. அடிக்கடி இன்ப வாழ்க்கைச் சூழல்களுக்கிடையிலும் ஆடம்பரங்களுக் கிடையிலும் அவர்கள் வாழ்கிறார்கள். எனவே இவர்களில் பலர் ஒரு சிறிதும் குறை கூறமுடியாத மாதரசியரா கின்றனர். பல சமயம் இவர்கள் மன்னர் பேரவையில் கூட இடம் பெற்று வாழ்வில் எதிர்பாரா வெற்றி காண்கிறார்கள். இது வகையில் நான் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் தரமுடியும்.'

து

கெஞ்சி இளவரசன் இப்போதும் சிரித்தான். 'இத்தகையவர்கள் வெற்றிக்கு அவர்கள் பொருள்தானே காரணம்?' என்று நையாண்டியாகக் கேட்டான்! இது தெரியாமல் பெரிதாக அளந்து விட்டாயே!' என்று தோ நோ சூஜோவும் இளவரசனை எதிரொலித்து ஏளனமாகக் கேட்டான். ஆனால், உமா நோ கமி இருவர் இடையீட்டையும் ஒரு சிறிதும் பொருட்படுத்தாமல் மேலும் தொடர்ந்தான்.

‘சிலரது குடிப் பெருமையையும் புகழையும் கண்டு பலர் ஏமாந்து விடுகின்றனர். அவர்கள் கல்விப் பயிற்சியிலேயே குறை இருக்க முடியு மென்றும் எண்ணிப் பார்க்காது போய் விடுகின்றனர். ஆயினும் அத்தகையவர்களை நம்பி அவர்களிடம் சிக்கி அல்லலுறுபவர்கள் அனுபவம் வேறு. "இவ்வளவு கல்லா விலங்குகளாகவே இவர்கள் எப்படித்தான் உயரிய சூழலிலே இருந்து வளர்ந்து விட்டார்களோ?” என்று அத்தகையோர் பலர் மீளும் வழி காணாது கதறுவதைக் கண்டிருக்கிறோம்.