பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

அப்பாத்துரையம் - 22

னால் இங்கேகூட நாம் எச்சரிக்கையாய் இருத்தல் இன்றியமையாதது. இளமை முறுக்குக்கும் மாசு மருவற்ற வடிவழகுக்கும் எப்போதும் குறுகிய எல்லையுடைய தற்பற்று உண்டு. ஒரு தூசிகூடத் தன்மேல் படப் பொறுக்காத ஒய்யார மென்னயத்துக்கும் அது வழி வகுப்பது உறுதி. இவற்றை உடையவர்களின் கடிதங்களில் ஆழ்திறமற்ற சிறு பொதுச் சொற்களன்றி வேறு எவையும் இடம் பெறமாட்ட டம் பெறமாட்டா. ஆனால் அந்தச் சிறு சொற்களின் வரி வடிவங்களுக்கும் அவர்கள் வண்ண மெருகிட்டுத் தீட்டி நம் உள்ளத்தில் இன்னதென்றறிய முடியாத துடிப்பை உண்டு பண்ணுவர். அதே சமயம் இதே பெண்களை அருமுயற்சியுடன் நாம் தனித்துச் சந்திக்கும் பேறு பெற்றபின் அவர்கள் நம் காதுகளுக்கே தெளிவாகக் கேட்காதபடி அவ்வளவு தாழ்ந்த மென்குரலில் பேசுவார்கள். இது அவர்களை நம்மிடமிருந்து இன்னும் அருந்தொலைவாக்கி அவர்களது மாயக் கவர்ச்சியை மிகுதிப்படுத்தவே உதவும்.

'இவை யனைத்தும் மேலீடாகப் பெண்மையின் இளமை நலத்துக்குரிய நாணத்தின் மயக்க தயக்கமாகவே தோன்றுவது இயல்பு. ஆனால், அது நேர்மாறாக உள்ளடங்கிய உணர்ச்சி வேகத்தின் புறத் தோற்றமாகவும் பின்னாடித் தெரியவர இடமுண்டு.

'இன்னும் சில இடங்களில் நாம் தேர்ந்தெடுத்த முழுநிறை அணங்கின் வாழ்வு தங்கு தடையற்ற இன்பத்துடன் மிதந்துசெல்வதாகத் தோற்றும். ஆனால், அதற்குள்ளாக, நாம் திர்பார்ப்பதற்கு நேர்மாறான திசையில் அது ச சரிவது காண்போம். அவள் உணர்ச்சியற்றவளா யில்லை யாயினும், அதற்கு நேர்மாறாக மட்டுமீறிய உணர்ச்சிக்கூறு உடையவளாய் அமையக்கூடும். மிகத் தகாத வேளைகளில், மிகத் தகாத முறைகளிலே அவள் தன் உணர்ச்சி ஆர்வங்களைக் கொட்டக் கூடும். அதுமுதல் "இவளிடமிருந்து நாம் எப்படித் தப்புவோம்” என்ற கவலை நம்மைப் பிடித்து ஆட்டத் தொடங்கிவிடும்.'

‘பாச ஆர்வமிக்க இன்னொரு வகை வாழ்க்கைத் துணை உண்டு. அவள் நம் குடும்ப நலனில் கொண்ட அக்கறை காரணமாக அதன் ஒவ்வொரு சிறு கூறுகளிலும் முழுமனதுடன் ஈடுபடுவாள். ஆனால், இது காரணமாகவே அவள் தன் வெளித்