பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

-

அப்பாத்துரையம் - 22

இல்லாத சமயம் என்ன நடைபெறுகிறது என்பது பற்றி அத்தருணங்களில் இம்மியளவும் சிந்தனையற்று இருக்கவும் முடியும். இந்த மாதரசியையும் நான் அவ்வாறு இடையிடையே தான் சந்தித்து வந்தேன். ஆயினும் சூழல் வயப்பட்டு நான் ஒருவனே அவள் உள்ளத்தில் இடம் பெற்றவன் என்று கருதி அகமகிழத் தொடங்கியிருந்தேன். இந்த ஓரிரவுக் காட்சி அந்த எண்ணத்தின் கடைசித் துகளைக்கூடப் பொசுக்கிவிட்டது.நான் அவளைத் திரும்பவும் ஒரு போதும் சென்று காணவில்லை.

‘அனுபவமற்ற என் புத்திளமையில் நிகழ்ந்த இந்த இரு நிகழ்ச்சிகளும் பெண்ணினத்தில் எனக்கிருந்த நம்பிக்கையைப் போக்கிவிட்டது. அதன் பின்னும் இத்திசையில் என் கருத்து வரவர மோசமாகிக் கொண்டு தான் வந்தது. உங்கள் பருவத்தில் அவற்றின் கவர்ச்சி பெரிதாகவே இருக்குமென்பதில் ஐயமில்லை. ஆனால், தொட்டால் உருக்குலைந்து விடும் புல் நுனி மேலுள்ள பகட்டான மணிக்கற்கள் போன்ற பனித்துளி போன்றவர்களே அவர்கள்! ஆனால், கையில் எடுத்தால் நீராகிவிடும் ஆலங் கட்டிகள்! இன்னும் சிறிது வயது சென்றால் நீங்களும் இவ்வாறே கருதுவீர்கள். தற்போது இந்த அறிவுரையையாவது உள்ளத்தில் கொள்ளுங்கள். ‘மட்டற்ற பாசம் காட்டுபவர்களிடமும்,மெல்லிய அன்பு வலை வீசி மையலில் சிக்க வைப்பவர்களிடமும் எச்சரிக்கையாயிருங்கள். நேர் வழி கடைப்பிடித்து அவர்கள் வயப்பட்டால் நீங்கள் உலகில் உங்களுக்குரிய மதிப்பைப் பெரிதும் இழப்பது உறுதி”

தோ நோ சூஜோ தை ஒத்துக் கொண்டதாகத் தன் வழக்கப்படி தலையாட்டினான். உமா நோ கமியின் இந்த அறிவுரைக்கு இணங்கியது போலவே கெஞ்சியும் புன்முறுவல் பூத்தான். ‘உங்கள் இருவரின் கதைகளும் ஒரே மாதிரிச் சோகக் கதைகள் தான்' என்று நகைத்தவாறே கூறினான்.

இப்போது தோ நோ சூஜோ மீண்டும் தன் கருத்து அறிவித்தான்.

6

'இப்போது நானாகவே உங்களுக்கு ஒரு கதை கூறுகிறேன்.

ஒரு மாதரசியிடம் நான் மிக இரகசியமாகவே நட்பாட வேண்டியவனாய் இருந்தேன். ஆனால் என் கடுமுயற்சி