பக்கம்:அப்பாத்துரையம் 22.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

அப்பாத்துரையம் - 22

கொண்டவள். இதுபோலவே, தோ நோ சூஜோ, ஓயா ஐயுறவு கொண்ட உங்கள் அணங்கும் மிகவும் ஐயுறவுக்கு இடமானவள் என்றே தோற்றுகிறது.

எனவே, அறிவார்ந்த வகையில், நாம் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், முடிவில் நாம் ஏமாற்றமே அடைவோம். உலகப் போக்கு அமையப் பெற்றுள்ள வகையே அது. எவ்வளவு தான் ஒப்பிட்டுப் பார்த்து அரித்துப் பொறுக்கித் தேர்ந்தெடுத்தாலும், எல்லா வகையிலும் எல்லா அளவிலும் போற்றத்தக்க நலமார்ந்த நங்கையை நாம் என்றுமே கண்டு தேர்தல் முடியாததாகும்!'

தோ நோ சூஜோ இப்போது இடைமறித்தான்.

'அழகுத் தெய்வமாகிய வானணங்கு கிச்சிஜோவை அத்தகைய அணங்கின் பண்புக்குச் சான்றாக நான் குறிப்பிட முடியும். ஆயினும் அவ்வளவு உயர்ந்த வீறமைதி வாய்ந்த ஒருவருடன் வாழ்வதென்பது நடைமுறைக்கு ஒவ்வாத தென்றே தோற்றுகிறது' என்றான்.

இது கேட்டு எல்லாரும் சிரித்தார்கள். தோ நோ சூஜோ மீண்டும் ஷிகிபுவின் பக்கம் திரும்பிப் பேசினான்.

'இனி SAபுவின் முறை. அவள் சுவைமிக்க ஏதேனும் நிகழ்ச்சி ஒன்று கட்டாயம் கூறுவான். வா, ஷிகிபு, பேச்சை நீயும் தொடர்ந்து செல்லவிடு' என்றான். 'என் போன்ற எளிய மக்களுக்குக் குறிப்பிடத்தக்க எந்தப் பெரு மகிழ்ச்சியும் நிகழ்வதில்லை' என்று ஷிகிபு தட்டிக் கழிக்க எண்ணினான். ஆனால் இப்படிப் பேசி மற்றவர்களைக் காக்க வைப்பது தவறு என்று தோ நோ சூஜோ அவனைக் கடிந்து கொண்டான். அவனும் தோழர்களுக்குப் பொருத்தமான நிகழ்ச்சி எது என்று சிறிது ஆழ்ந்து யோசித்த பின் தொடங்கினான்.

‘நான் பல்கலைக் கழகத்திலே ஒரு மாணவனாக இருந்த சமயத்திலேயே ஒரு பெண் எனக்குத் தெரியவரலானாள். அவள் அதிசயிக்கத் தக்க ஓர் அறிவுப் பிழம்பு. சிறந்த பெண்களுக்குரிய இலக்கணங்களாக உமா நோ கமி குறிப்பிட்ட பண்புகளில் ஒன்று அவளிடம் இருந்ததென்பதில் ஐயமில்லை. ஏனெனில் பொதுச் செய்திகள் பற்றியும் சரி, தனிப்பட்ட விவகாரங்கள் பற்றியும் சரி -