பிறமொழி இலக்கிய விருந்து -1
குஸ்ரூ: யார் இங்கே? வானர ராஜாவா? குர்ரம் எங்கே?
99
வா-ரா: ஆம். போருக்குச் சென்றிருக்கிறார். என்னை உன் காப்பாளனாக்கிச் சென்றிருக்கிறார்.
குஸ்ரூ: எனக்கு ஏன் காவல்? கோட்டைவாயிலுக்கு வெளியே நான் போகாமல் ஏன் அடைக்க வேண்டும்?
வா-ரா: காவல் அல்ல பாதுகாப்பு. தாங்கள் கவலையற்றுத் தூங்கலாம்.
(போகிறான்)
குஸ்ரூ: ஆ, என் உடன் பிறந்த அண்ணனே என்னை இப்படி நடத்துகிறான். அவனுக்கு நான் என்ன செய்தேன்? தந்தையை விட அவன் மீது பாசம் வைத்தல்லவா வந்தேன்?
(குஸ்ரூ தூங்குகிறான். கொலைகாரருடன் வானரராஜா வருகிறான். கொலைகாரர் குஸ்ரூவைக் குத்துகின்றனர்.) குஸ்ரூ: ஆ, அப்பா..! இது என்ன! என்னை யார் கொலை செய்வது? வானரராஜா? இப்போது புரிகிறது!
(விழுகிறான்.அனைவரும் மறைகின்றனர்.)
(அரண்மனை: நூர்ஜஹான், அஸஃவ்)
து
அஸஃவ்: மேஹர், இது முழுவதும் உன் திருவிளையாடல். வானர ராஜாவை ஏவிவிட்டுக் குர்ரம் மீது பழியைச் சாட்டி அவனையும் ஒழித்து விடப் பார்க்கிறாய்.
நூர்: அஸஃவ், நீ என் அண்ணனாயிருக்கலாம்; ஆனால் உனக்கு அரசியல் தெரியாது. இதிலெல்லாம் நீ தலையிட வேண்டாம். எச்சரிக்கை! என்னைப் பேரரசியாகும்படி நீ தான் தூண்டினாய்.நினைவிருக்கட்டும்.
அஸஃவ்: (தலையைக் கவிழ்ந்தவண்ணம்) சரி, ஆவது
ஆகட்டும்.
(போகிறான்)
நூர்: தீ கொழுந்துவிட்டெரிகிறது. குஸ்ரூ முதல் பலி. இனி அடுத்த பலி...