பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




230

அப்பாத்துரையம் - 25

அப்பாத்துரையார் 82 ஆண்டுகள் வாழ்ந்து ஆ வாழ்ந்து பல அறிஞர்களோடு பழகி கணக்கற்ற அறிவுச் செல்வங்களை வழங்கி, 26.9.89 இல் புகழுடம்பு எய்தினார். பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, எழுத்துத் துறையில் கவிஞராக ஆய்வறிஞராக, எழுத்தாளராக, மொழி பெயர்ப்பாளராக ஒப்பிலக்கியவாதியாக பத்திரிகையாளராக விழுதுகள் பரப்பி ஆலமரமாகத் திகழ்கிறார். இந்த ஆலமரத்தின் விழுதுகளைப் பிடித்து விளையாடியவர்களெல்லாம் பெரிய மனிதர்களாக உயர்ந்துள்ளார்கள். ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த அப்பாத்துரையார் தமிழர்கள் நெஞ்சில் என்றும் நிலைப்பார்.

-முனைவர் இளமாறன்

யாதும் ஊரே மாத இதழ், வைகாசி 2037, சூன் 2006, பக்.18-22