பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

|-

அப்பாத்துரையம் - 32

அன்பு சிறிதன்று. இதை நீ இதுவரை அறிந்திருக்க முடியாது. நீ சென்றது முதல் அத்தை கடலுலக ஆட்சியையே வெறுத்து விட்டார். கடலுலகமும் இப்போது கடலுலகமாய் இல்லை. அங்கே விழாக் கிடையாது. விருந்து கிடையாது. உன்னைப் பற்றியே எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

66

"உன் வீரச்செயல்கள் யாவும் எங்களுக்குத் தெரியும் நாங்கள் அனைவருமே உன்னைத் தொடர்ந்து ஆழ்கடலணங் கினிடம் சென்றோம். அவள் உதவியால் நிலவுலகில் நடப்பதையும் அறிந்து கொண்டோம். குரலை இழந்ததால், நீ படும் துயரம், உனக்கு நேர்ந்த தோல்விகள் ஆகியவற்றைக் கண்டு கொண்டோம். ஆழ்கடல் நங்கையிடம் உன் புதுவாழ்வின் வெற்றி நாடி நாங்கள் எங்கள் அனைவரின் வாழ்நாளில் பாதி தருவதாக உறுதி கூறினோம். அவள் உள்ளமும் இளகிற்று. அவள் அதற்கு வழி கூறினாள். அந்தப் புதிய வலுவுடனே தான் உன்னைத் தேடி வந்தோம்” என்று கோமாட்டி முடித்தாள்.

தமக்கையின் அன்புத் துடிப்பு வேல்விழியை ஆட்கொண்டது. அவள் தமக்கையின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். “உங்கள் அனைவரின் அன்பும் எனக்கு முன்பே தெரியும் அக்கா.ஆனாலும் இவ்வளவு எனக்காக நீங்கள் துன்பம் ஏற்க நேர்ந்ததற்கு வருந்துகிறேன். என் புது வாழ்வில் இவற்றால் மட்டும் எப்படி வெற்றி கிட்டக்கூடும் என்பது விளங்கவில்லை. நாளை இளவரசன் திருகுவளையை மாலையிட இருக்கிறான். ஆனால் அதற்காக நான் கவலைப்படவில்லை. நான் நுரையாக உங்களைச் சுற்றி ஆடுவேன். இளவரசனும் எந்தன் மறுப்பை அறிந்து என்னை உள்ளத்தில் போற்றுவது உறுதி, இது தவிர எனக்கு வேறு என்ன வேண்டும்?” என்றாள்.

கோமாட்டி கண் பனித்தது. "பெருந்தன்மை மிக்க நங்கையே... உன் புதுவாழ்வு அது அன்று; இதோ என்னிடம் ஓர் ஒப்பற்ற மாயவாள் இருக்கிறது. எங்கள் பாதி வாழ்வு கொடுத்து அதை ஆழ்கடலணங்கிடம் பெற்றோம். இன்றிரவு இதனைத் திருகுவளை உடலில் செலுத்திவிட்டால் போதும், உன திடமாகத் திருகுவளை நுரையாவாள், நீ அவளிருக்க வேண்டிய இடத்தில் இருப்பாய்; பாண்டியர்குல அரசியாவாய்; முன்பே பாண்டியர் குடியுடன் நமக்குத் தொடர்புண்டு. உன்னால்