பக்கம்:அப்பாத்துரையம் 32.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

அப்பாத்துரையம் - 32

ஏனெனில் நீங்கள் என் வாக்குறுதியை நிறை வேற்றியதும் அன்றி, என் உயிரையும் ஒரு கோர மாயத்திலிருந்து மீட்டீர்கள். அந்தத் தலைமட்டும் என்முன் கிடக்காவிட்டால். உங்கள் வெற்றியால்கூட நான் மகிழ்ந்திருக்க முடியாது. ஏனென்றால், யாராவது மூன்று நாளும் வெற்றி பெற்றுவிட்டால், அந்தப் பொல்லாத மாயாவிக்கு வெற்றிபெற்ற இளைஞனுடன் நானும் இரையாக வேண்டும். தங்கள் உயிரையும் என் உயிரையும், அப் பொல்லாப் பகைவனை ஒழித்துத் தாங்கள் மீட்டுள்ளீர்கள். என் தந்தை உயிரையும் காத்து மக்கள் இடரும் தீர்த்தீர்கள்” என்றாள்.

அவள் மாயத்தின் முழுக் கோரவடிவையும் அவன் சொற்களால் அறிந்த யாவரும் இளஞ்சாத்தனைப் பன்முறை புகழ்ந்து கொண்டாடினர். அன்றே மணவினைக்கான ஏற்பாடுகள் எங்கும் தொடங்கின.

இளஞ்சாத்தன் உள்ளம் இந்த மகிழ்ச்சியிலும் வழித்துணை வேலன் அருஞ்செயல்களை மறக்கவில்லை. மகிழ்ச்சிகரமான முடிவுகூற அவன் அருந்தகம் விரைந்தான். ஆனால் வழித்துணை வேலனை எங்கும் காணவில்லை அவன் படுக்கையில் ஓர் உறை கிடந்தது. ஆவலுடன் அதைப் பிரித்துப் படித்தான்.

“அன்பனே, என்னை நீ எங்கும் தேட வேண்டாம். நான் ஆவி உருவில் எப்போதும் உன்னுடனிருந்து உன்னைக் காப்பேன். என்வேலை முடிந்துவிட்டது.நான் செல்கிறேன்.”

"நான் யார் என்பது உனக்குத் தெரியுமா? கடன்காரப் பழிகாரரிடமிருந்து நீ மீட்ட உடல் என் உடல்தான். கடன் சுமையால் என் உயிர் உடலைச் சுற்றி ஊசலாடிக் கொண்டிருந்தது. பழிகாரர் அடிகள் மட்டுமின்றிச் சொற்களும் என் ஆவியைத் துளைத்தன. உன் செயல் எனக்கு விடுதலை தந்தது. என் நன்றியை உனக்குச் செயல் மூலம் தெரிவிக்காமல் நான் மேலுலகம் செல்ல விரும்பவில்லை.

“வாழ்வில் நான் மருத்துவனாயிருந்தேன். கடன் வாங்கி நான் உழைத்தது உயிர் மருந்தைக் காணும் பொருட்டே; இறக்கும் தறுவாயில்தான் அதைக் கண்டேன். அது எனக்குப் பயன்பட வில்லை. ஆனால் நன்றியுணர்வு என் ஆவிக்கு மீண்டும் ஆற்றல ளித்தது. நான் என் உடலிற் புகுந்து உன்னைத் தொடர்ந்து வந்து