பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(100)

||-

அப்பாத்துரையம் - 33

அச்சமயம் "அண்ணா என்ற குரல் கேட்டு அவன் திடுக்கிட்டான்.

சேந்தன் அவன் முன் நின்றான்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

இளவரசிக்கும் எதுவும் புரியவில்லை. ஆனதால் அவள் பாதி உண்மையை ஊகித்தாள். "குரங்கு கொடுத்த பொருள் இதோ இருக்கிறது. இது அதன் அரிய ஆற்றலாய்த் தான் இருக்க வேண்டும்” என்றாள்.

இளவரசிக்கு முன் பிறந்த இளவரசன் ஒருவன் இருந்தான். அவன் இரண்டாண்டுகளுக்கு முன் இறந்திருந்தான். இளவரசி கூறியதைக் கேட்ட அரசி கனியைத் தான் வாங்கி, “எனக்கு என் மகன் உயிருடன் வர வேண்டும்" என்றாள்.

இளவரசியின் அண்ணன் தன் தாய் முன் வந்து “அம்மா!”

என்றான்.

அரசன், அரசி, இளவரசன், இளவரசி ஆகிய எல்லா உறவினருடனும் சேந்தனுடனும் செம்பியன் களிப்புடன் நாட் கழித்தான்.

மண்டபத்தில் கண்ட ஆண்டி ஒரு நாள் செம்பியன் கனவில் தோன்றினார்.

ஆண்டியின் உருவம் செந்திலாண்டவன் உருவமாக

மாறிற்று.

புரோகித ஆண்டி ஆண்டவனை வழிமறிக்க முயன்றான். "ஆண்டவனே, இவன் பாவி! இவன் பக்கம் வராதேயுங்கள்” என்று அவன் கத்தினான்.

ஆண்டவன் புரோகித ஆண்டியைத் தள்ளி வீழ்த்தினார். பின் அவர் செம்பியனை அணுகி அன்புடன் நோக்கினார்.

66

“அன்பனே, எனக்குப் பழி செய்ததாக இவன் உன்னிடம் சொன்னது முழுதும் தவறு.

குரங்கின் துன்பத்தில், கிளியின் படுதுயரில், பாம்பின் பரிதவிப்பில் நான் தான் வந்து நின்று உன்னிடம் கேட்டேன். நீ