பக்கம்:அப்பாத்துரையம் 33.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 2

45

மாண்டு விட்டதாக நினைத்த அரசன் மீண்டு வந்ததையும், புதிய அரசியுடன் வந்ததையும் கண்டு மக்கள் மகிழ்ச்சிக் கடலுள் குளித்தனர்.

சிறையிலடைபட்டிருந்த தச்ச இளைஞனைப் பொன்மீளி விடுதலை செய்து. அவனுக்கு ஐம்பது நூறாயிரம் பொன் பரிசளித்தான். அத்துடன் அவனையே அமைச்சனாகவும் அமர்த்திக் கொண்டான். அவன் நண்பனான தட்டார இளைஞனுக்கும் அரண்மனையில் தக்க பணி தரப்பட்டது.

அரசி நிலாச்செல்வியுடன் பொன்மீளி செய் நாட்டை நீண்டகாலம் ஆண்டான்.