பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்க் கதைக் களஞ்சியம் - 5

91

இறுதியாட்டத்தை முற்றுவித்தாள். மெர்லினும் அவன் மாயமும் அறிவிலும் ஆற்றலிலும் அவனுக்கு பன்மடங்கு கீழ்ப்பட்ட அச்சிறு கள்ளியின் மாயத்திற்குக் கட்டுப்பட்டு அம்மரத்திலேயே புதையுண்டன. எலி, மலையைச் சிறைப்படுத்தியது போல் தனக்கு மந்திரங் கற்பித்த ஆசானைக் சிறைப்படுத்தி நடைப் பிணமாக்கி அவள் வெற்றியுடன் ஆர்தர் நகராகிய காமிலட்டுக்கு மீண்டு வந்தாள். அதுமுதல் ஆர்தரின் ஒழுக்கக் கோட்டையில் ஒழுக்கக் கேடு பெருகி அழிவுப் பயிர் வளரலாயிற்று.

அடிக்குறிப்புகள் 1. Vivien