பக்கம்:அப்பாத்துரையம் 37.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

அப்பாத்துரையம் – 37

சிறப்புடன் வாழுமாறு வேண்டிக் கொள்வதாகவும், பிரடரிக் அந்த ஆள் வாயிலாகவே செய்தி அனுப்பியிருந்தான். இச் செய்தியை எதிர் பாராமல் அறிந்த அனைவரும் வியந்து மகிழ்ந்தனர். திருமணக் கொண்டாட்டம் முன்னிலும் பன்மடங்கு இன்பமாக மாறியது.

ஸீலியா பேருவகை கொண்டாள்; தமக்கை ரோஸலிண்டை வாழ்த்தினாள். அவள் பெற்ற பெருஞ்சிறப்பு, தான் பெற்றதே ஆகும் என்று தெரிவித்தாள். ஸீலியாவின் உள்ளத்தில் பொறாமையோ வருத்தமோ எழவில்லை. தமக்கையினிடம் அவளுக்கு இருந்த உண்மையான அன்பு அத்தகையது.

அரசன் நாட்டிற்குச் சென்றான்; முடிசூடினான், தன்னுடன் காட்டிற்கு வந்து தன் பொருட்டுத் துன்பமுற்ற நண்பர்களுக்கு நன்றி கூறினான். எல்லோரும் இன்புற்றனர்; எல்லாம் விரும்பிய வண்ணமே ஆயின.

Orlanda

அடிக்குறிப்புகள்

2. Frederick

1.

4. Celia

3.

Rosalind

5.

Sir Rowland

6. Arden

8. Aliena

1.

9.

Oliver

Ganymede

10. Adam