இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மருதூர் மாணிக்கம்
157
மருதுவும் அவனுடன் சென்றிருந்தான். பக்தியை நன்கு தேர்ந்தறிந்தபின், அவனே அன்னை திருவுருவின் உள்ளிருந்து அன்னை குரலில் பேசினான். அவன் கைவிளக்கே அன்னை திருவுருவின் கண்களுக்குள்ளிருந்து ஒளி வீசிற்று. இளவரசி யுருவில் அன்னையாகக் காட்சியளித்ததும் அவனே. இந்த 'அன்னை' காட்சியாலேயே வள்ளியின் காதல் கதையையும் அவர்கள் அறிய முடிந்தது.
வேடிக்கையாகவே அவர்கள் நாடகத்தைத் தொடங்கி யிருந்தனர். ஆனால் அதன்மூலம் பாரத வீரனின் பலதிறப் பண்புகள் வெளிப்பட்டது கண்டு அவர்கள் அகமகிழ்ந்தார்கள். அவன் நடிப்புப் புகழைமட்டும் அன்றி, உண்மைப் புகழையும் அவர்கள் எங்கும் பரப்பினார்கள்.