206
அப்பாத்துரையம் - 39
செல்வன் இளைஞனைப் பார்த்த பார்வையே இது து உண்மை என்று காட்டிற்று. பாரத வீரன் அவனை மீண்டும் நையப்புடைத்தான். 'இப்போதே பணம் கொடுத்தனுப்பு!’
என்றான்.
"கொடுத்து விடுவேன். என்னிடம் இப்போது இல்லையே. வீட்டில் சென்று கொடுக்கிறேன்” என்றான்.
"வேண்டாம், எழுதிக்கொடுத்து அனுப்பு” என்றான்.
பாரத வீரனே தாளும் மைக்கோலும் எடுத்து நீட்டினான். அவன் மாறு பெயருடன் கையொப்பமிட முயன்றான். இளைஞன் இதைச் சுட்டிக்காட்டினான். 'நீயும் உன் படிப்பும் நாசமாய்ப் போக!' என்று செல்வன் சினந்து விழுந்தான். ஆயினும் பாரத வீரன் கடுங்குத்துக்கும் உதைக்கும் அஞ்சி அவன் எழுதிக்கொடுத்தான்.
இளைஞன் பாரத வீரனுக்கு வணக்கம் செலுத்தினான். "அண்ணலே, உங்கள் முயற்சி நீடூழி வாழ்க. என்வகையில் நீங்களே இருந்து நடத்திய நன்மைதான் எனக்குக் கிடைக்கும். இவன் வாக்குறுதி, பத்திரம் எதற்கும் விலை கிடையாது. அவற்றை நம்பி நான் இந்த நாட்டில் இருப்பதே ஆபத்து. இவன் ஊர்ப்பெரிய மனிதன், பணக்காரன். ஆகவே காவல், துறை, சட்டம் எல்லாம் இவனுக்குத்தான். ஏழைகளாகிய எங்களுக்குக் கிடையாது. ஆகவே உங்கள் முன்னாலேயே நான் ஓடி விடுகிறேன். அவனோ, அரசியல் காவலரோ கைப்பற்று முன் வெளிநாடு சென்று விடுவேன்” என்றான்.
பாரத வீரன் எவ்வளவு கூறியும், அவன் கேட்கவில்லை. கையொப்பப் பத்திரத்தைப் பாரத வீரனிடமே போட்டு விட்டு ஓடினான்.
பாரத வீரன் ஊரில் பாரத வீரனே ஊர்ப் பெரிய மனிதன். ஆனால் எல்லா ஊர்ப் பெரிய மனிதரும் தன்னைப் போல இல்லை என்று அவன் கண்டான். இந்நிலையை மாற்ற என்ன செய்வது என்ற ஆலோசனையுடனேயே அவன் நடந்தான்.
அவன் எண்ணத்தை அறிந்தவன் போல பாங்கன் பேசினான். இத்தடவை சீடன் குருவுக்கு மிஞ்சிய அறிவுரை